விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 439:
 
மகளிர் தினத்தையொட்டி நாளை மார்ச் 7 ஆம் நாள் மதுரை மற்றும் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பல கல்லூரி மாணவர்கள் பங்கெடுக்கும் தொடர்தொகுப்பிற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை இத்தகைய எண்ணிக்கையில் தொடர்தொகுப்பு நடைபெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் செய்து கொள்ளலாம். பங்கெடுப்பவர்கள் அனைவரும் பயனர் பெயரை முன்னரே உருவாக்கி வரக் கேட்டுள்ளோம். மணல் தொட்டியில் கட்டுரை எழுதிவிட்டுப் பின்னரே முதன்மை வெளிக்கு மாற்றுவோம் ஆனால் இவர்கள் அனைவரும் புதியவர்கள் என்பதால் பிழையாகப் பக்கங்களைத் திருத்தக் கூடும், அல்லது முழுமை பெறாத பக்கங்களை வெளியிடக் கூடும். அதனைக் கனிவோடு நீக்கியும் நீக்காமலும் காலை 9 முதல் மாலை 6 வரை இந்த நேரத்தில் தொடர்தொகுப்பில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவக் கோருகிறேன். பார்வதிஸ்ரீ, அபிராமி, வசந்தலட்சுமி, பாலசுப்ரமணியன், புவனா மீனாட்சி, மகாலிங்கம், அம்மார், தியாகு ஆகியோருடன் நானும் இதில் பங்கெடுக்கிறேன் ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்களும் இணைந்து கொள்ளலாம் -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 11:19, 6 மார்ச் 2020 (UTC)
:மதுரையில் 90 சேலத்தில் 60 மாணவர்கள் என எதிர்பார்க்கிறேரம். ஒரே தலைப்பைப் பலர் எடுக்காமல் இருக்க
:முதல் திருத்தத்தை மணல்தொட்டியில் செய்யச் சொல்வோம்.
:கட்டுரை எழுதும் நம்பிக்கை வந்தவுடன் எழுதப்படாத கட்டுரையைத் தேர்வு செய்து வேலை நடந்துகொண்டிருக்கிறது வார்ப்புரு உடன் வெற்றுப் பக்கத்தை உருவாக்கி முன்பதிவு செய்து கொள்ள சொல்வோம்.+ விக்கிதரவகத்தில் இணைக்கச் செய்வோம்
:கடைசியில் எமுதியதை இட்டுச் சேமிக்கச் சொல்வோம்.
:தொடர் தொகுப்பு நிறைவு ஆனப் பின்னர் மேலும் வளர்க்க முடியாத பக்கங்களை நீக்குவோம். மற்றவற்றை மேம்படுத்த அறிவுறுத்துவோம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 16:37, 6 மார்ச் 2020 (UTC)