'''தமிழரசுக் கழகம்''' (''Tamil Arasu Kazhagam'') [[ம. பொ. சிவஞானம்]] என்பவரால் [[1946]], நவம்பர் 21 நாளில்அன்று சென்னையில்[[சென்னை]]யில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய அமைப்பாகும். 'தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும். சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் உரிமை தமிழருக்கு உண்டு' என்பது தமிழரசு கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது.<ref>[{{cite web|url=https://www.hindutamil.in/news/opinion/columns/522865-tamil-nadu-day.html|title= தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!, செல்வ புவியரசன்,}} இந்து தமிழ், 2019 (நவம்பர் 1], 2019)</ref> இந்திய விடுதலைக்கப்விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து அவற்றுக்காகப் போராடும் நோக்கோடு இந்த அமைப்பு செயல்பட்டது. ம.பொ.சி இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார். [[சென்னை]] தமிழகத்திற்கு தலைநகராக ஆனதற்கு ம. பொ.சிஅவர்களின்சியின் தமிழரசுக் கழகமேகழகமும் ஒரு காரணமாகும்.