மாசி மகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மகாமகம் இணைப்பு
சங்க காலம் தொடங்கி இவ்விழா நடைபெறுவது மேற்கோளுடன் இணைப்பு
வரிசை 20:
 
[[இந்தியா]]வில் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] மாசிமகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள்.
 
==சங்க காலம் முதல் நடைபெறும் விழா==
சங்க காலம் தொடங்கி இவ்விழா நடைபெற்றது தொடர்பான செய்திகள் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றன. <ref>[https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2020/mar/06/waterfalls-at-massimaka-festival-3375227.html வெ.இராமமூர்த்தி, மாசிமக பெருவிழாவில் புண்ணிய நீராடல்!, தினமணி, 6 மார்ச் 2020]</ref>
 
===இலக்கியங்கள்===
மதுரைக் காஞ்சியின் ஆசிரியா் மாங்குடி மருதனாா் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்தது பற்றிக் குறிப்பிடுகின்றார். சங்க காலப் பாண்டிய மன்னன் முந்நீா் விழாவின் நெடியோன் என்று அழைக்கப்படுவதாக ஒன்பதாவது புறநானூற்றுப் பாடலில் காணப்படுகிறது. திருஞானசம்பந்தா் தன்னுடைய மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றிக் கூறுகிறார்.
 
===செப்பேடு===
கோக்கரு நந்தடக்கன் எனும் ஆய்குல மன்னன் (கி.பி.9ஆம் நூற்றாண்டு) வழங்கிய செப்பேட்டில் திருமாலுக்கு ஏழுநாள் திருவிழா எடுக்கப்பட்டது பற்றியும், பங்குனி விசாகம் ஆறாடுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
===கல்வெட்டுகள்===
திருச்செந்தூரில் [[வரகுண வர்மன்|இரண்டாம் வரகுணபாண்டியரின்]] (கி.பி.862) மூன்று அதிகாரிகள் 1400 காசினை மூலதனமாகக் கொண்டு பல விழாக்கள் நடத்தியதையும், அதில் ஒரு விழாவாக மாசிமகம் குறிக்கப்பட்டுள்ளளதையும் காணலாம். இது கல்வெட்டுகளில் காணப்படும் தொன்மையான மாசிமக விழா பற்றிய குறிப்பாக உள்ளது.
 
[[முதலாம் இராஜராஜ சோழன்]] காலத்தில் (கி.பி.1009) [[திருச்சி மாவட்டம்]] திருப்பராய்த்துறை மகாதேவா்க்கு மாசிமகத்தன்று பெருந்திருவமது படைக்கப்பட்டதாகவும், அதற்காக ஒன்றரை மா அளவு நிலம் நல்கப்பட்டு இரண்டு கல அரிசி கிடைக்க வழி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
[[இராசேந்திர சோழன்]] 4-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1016) நாகப்பட்டினக் கூற்றத்து ஊராா்கள் இறைவனது மாசிமக விழாவின் ஆறாம் நாள் செலவுகளுக்காக நிலமளித்த செய்தியினை அவ்ரிலுள்ள கல்வெட்டின்மூலமாக அறியலாம்.
 
[[முதலாம் குலோத்துங்க சோழன்]] (கி.பி.1070-1126) தளபதி [[நரலோக வீரன்]] [[சிதம்பரம்]] கோயிலில் செய்த திருப்பணிகளை அழகான தமிழ்ப்பாடல்களாகவும், சமஸ்கிருதச் சுலோகங்களாகவும் சிதம்பரம் நூற்றுக்கால் மண்டபத்து தூண்களில் கல்வெட்டாக பொறித்துள்ளார். அவற்றில் ஒரு பாடலில் மாசிக் கடலாடலைப் பற்றியும், அதற்காக அம்மன்னன் அமைத்த மண்டபம், பெருவழி ஆகியவற்றையும் பற்றிக் கூறுகிறது.
 
[[வேதாரண்யம்|திருமறைக்காட்டில்]] ஏழு நாள் கொண்டாடப்பட்ட மாசித் திருநாளின் போது இறைவன் மோகனதேவருக்கு நாள் ஒன்றுக்கு பதின் கலமாக எழுபது கலம் நெல் தானமாக அளிக்கும் வகையில் பாலையூா் கிழவன் நாரணன் காடன் நிலம் தந்துள்ளதைப் பற்றியும், அம்மன்னனே இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மாசிமகத்துக்கு பெருந்திருவமது இறைவனுக்கு படைத்திட வேண்டி இன்னும் கூடுதலாக நிலமளித்துள்ளதைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
 
[[திருவரங்கம்|திருவரங்கத்தில்]] கி.பி.1531-ஐ சாா்ந்த விஜயநகா் காலக் கல்வெட்டின் மூலமாக உறையூரில் நடைபெற்ற மாசிமக விழா பற்றிய செய்தியை அறியமுடிகிறது.
 
[[குடுமியான்மலை|குடுமியான் மலையில்]] உள்ள குலோத்துங்கன் மற்றும் பரகேசரி பட்டமுடைய மற்றொரு சோழ மன்னன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் மாசி மக நாளில் பிராமணா்களுக்கும், பதினைந்து சிவனடியாா்களுக்கும் உணவு வழங்க 15 கழஞ்சு பொன் முதலாக வழங்கப்பட்டதைப் பற்றிக் கூறுகின்றன. மாசி மகவிழாவின்போது தெய்வங்கள் நீராடுவதும் அதன் பிறகு அருகில் அமைக்கப்பட்ட மண்டபம், தோப்பு ஆகியவற்றில் காட்சி தருவதும் அத்தெய்வங்களுக்கு பெருந்திருவமுது”படையல் படைக்கப்படுவதும் மரபு என்று மேற்சொன்ன கல்வெட்டுச் செய்திகள் விளக்குகின்றன.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/மாசி_மகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது