பண்டைத் தமிழர்கள் இயற்கை நம்பிக்கை அல்லது உலகாயுதக் கொள்கை உடையினர் என்பது சிலர் கருத்து. இக்காலத்தில்அக்காலத்தில் தமிழர் [[இன்பம்|இன்பத்துக்கு]] முக்கியத்துவம் தந்து உலகில் வாழ்வதை முதன்மையாக கொண்டனர். சங்க காலப் பாடல்கள் பல காதல், வீரம், இன்பம் பற்றி அதிகம் கூறுவது இதற்கு ஒரு சான்றாக கொள்ளப்படுகிறது. இருப்பினும் பழங்காலத்திலேயே தமிழர் மத்தியில் இந்து சமயம் பரவியிருந்தது. அதன் பின்னர் தமிழர் பெளத்த சமண சமயத்துக்கும் மாறினர். பெளத்த சமண அறக் கருத்துக்களும் [[அறியாமைக் கொள்கை|அறியாமைக் கொள்கையும்]] தமிழர் மத்தியில் வேரூன்றின. இதன் பின் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்கள் தமிழ் பக்தி இயக்கத்தை தோற்றுவித்தது. பக்தி இயக்கம் வேத கடவுள்களுக்கு முக்கியத்துவம் தந்து தமிழர் மத்தியில் மீண்டும் இறைபக்தி ஏற்பட வழிவகுத்தன. பின்னர் ஏற்பட்ட இஸ்லாமிய ஆக்கிரமிப்பு, மேற்குலக ஆக்கிரமிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க தமிழர்களை இஸ்லாம், கிறிஸ்தவம் சமயங்களுக்கு மதம் மாற்றம் செய்தன.