ஓரிடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை, [[நிலம் ஊடுருவும் ராடார்]]கள் போன்ற [[தொலையுணர்தல்]] முறைகள் மூலம் ஓரளவு துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும். இம்முறைமூலம் களமொன்றின் வளர்ச்சி குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும். நுணுக்கமான அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு இன்றியமையாதது.
==அகழ்வாய்வின்அகழாய்வின் வளர்ச்சி வரலாறு==
அகழ்வாய்வுஅகழாய்வு நுட்பம் முதலில் புதையல் தேடும் முயற்சிகளில் இருந்து தொடங்கியது. காலப்போக்கில் இத் துறையானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளையும்; அவ்விடம் பிற இடங்களோடும், அவ்விடம் அமைந்துள்ள நிலத்தோற்றத்தோடும் கொண்டுள்ள தொடர்புகளையும், முழுமையாகப் புரிந்து கொள்ள முயலும் ஒரு துறையாக வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் வரலாறு தொடக்கத்தில் [[அரும்பொருள் சேகரிப்பு|அரும்பொருள் சேகரிப்பவர்களின்]] தேவைக்காக [[அருங்கலைப் பொருள்|அருங்கலைப் பொருட்களைத்]] தேடியெடுப்பதற்கான ஒரு திருத்தமற்ற முறையாகவே இருந்தது. இத்தகைய தோண்டுதல் நடவடிக்கைகள் பழங்கால மக்கள் தொடர்பான சான்றுகளை அழித்து விடுகின்றன என்பது உணரப்பட்டது. இத்தகைய அரும்பொருட்கள் அவற்றில் சூழலில் இருந்து அகற்றப்பட்டதும், அவற்றில் பொதிந்துள்ள பெரும்பாலான தகவல்கள் இல்லாது போய்விடுகின்றன. இப் புரிதலின் அடிப்படையிலேயே அரும்பொருள் சேகரிப்பு என்பது [[தொல்லியல்]] அல்லது தொல்பொருளியல் என்னும் துறையாக வளர்ந்தது.