உத்தம சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2927169 Gowtham Sampath உடையது. (மின்)
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
''கோப்பரகேசரி வர்மன்'' '''உத்தம சோழன்''', கி.பி 950 முதல் கி.பி 957 வரை [[சோழ நாடு|சோழ நாட்டை]] ஆண்ட [[கண்டராதித்தர்|கண்டராதித்த சோழனின்]] மகனாவார். கண்டராதித்தர் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவர் பதவிக்கு வரவில்லை, பதிலாக [[இரண்டாம் பராந்தகன்]] என அழைக்கப்பட்ட [[சுந்தர சோழன்]] பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.{{cn}} இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் [[இராஜராஜ சோழன்]] [[அரியணை]] ஏறினார். இவருக்கு ''மதுராந்தகன்'' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார்.
{{Infobox Chola
| name= .உத்தம சோழன்
| tamil = உத்தம சோழன்
| title = கோப்பரகேசரி வர்மன்
| reign= கி.பி. 970 - 985
| capital = [[தஞ்சாவூர்]]
| queen=
| children= தெரியவில்லை
| predecessor= [[சுந்தர சோழன்]]
| heir= [[முதலாம் இராசராச சோழன்]]
| father= [[கண்டராதித்தர்]]
| year of birth= [[தஞ்சாவூர்]]
| year of death= [[தஞ்சாவூர்]]}}
 
 
''கோப்பரகேசரி வர்மன்'' '''உத்தம சோழன்''', கி.பி 950 முதல் கி.பி 957 வரை [[சோழ நாடு|சோழ நாட்டை]] ஆண்ட [[கண்டராதித்தர்|கண்டராதித்த சோழனின்]] மகனாவார். கண்டராதித்தர் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவர் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட [[சுந்தர சோழன்]] பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.{{cn}} இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் [[இராஜராஜ சோழன்]] [[அரியணை]] ஏறினார். இவருக்கு ''மதுராந்தகன்'' என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார்.
 
இவர் அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்தரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவர் ''பரகேசரி'' என்னும் பட்டம் பெற்றவர். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவர் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர்.<ref>{{Cite book |authormask=மா. இராசமாணிக்கனார் |year=1947 |title=சோழர் வரலாறு |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D |chapter=4. பராந்தகன் மரபினர்}}</ref> சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். இவன் காலத்ததான பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.<ref>Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151.</ref>
"https://ta.wikipedia.org/wiki/உத்தம_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது