[[சோழர்]] காலத்தில் கட்டப்பட்ட வைணவ கோயில்களில் ஒன்று. கி.பி. ஐந்தாம்மூன்றாம் நூற்றாண்டில் [[சோழர்|கோச்செங்கட் சோழனால்]] கட்டப்பட்டது. இது ஒருமாடக்கோயில்(யானை ஏற முடியாத கோயில்). இந்த கோவில் 75 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மூலவர் சந்நிதியை அடைய 21 படிகள் ஏறவேண்டும். இந்ததலத்தில் வஞ்சுளவல்லி தாயாருக்கே முதலிடம் எனவே நாச்சியார்கோயில் என அழைக்கப்பட்டது. மேதாவி என்னும் மகரிஷியின் தவப்பயனாய் வஞ்சுள மரத்தடியில் கிடைத்த குழந்தையே வஞ்சளவல்லி ஆவார். வஞ்சளவல்லி பருவகாலம் வந்தபோது எம்பெருமான் தன் ஐந்து அம்சமான சங்கர்ஷணன், ப்பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன் ஐந்து உருவங்களாகி மகரிஷி குடிலுக்கு சென்று விருந்துண்டு கைக்கழுவும் போது நீர் கொடுத்த வஞ்சளவல்லி கைப்பிடிக்க கோபம் கொண்ட மகரிஷி சாபம் கொடுக்க இருந்த நேரத்தில் ஐவர் ஒருவராகி வஞ்சளவல்லியை கரம் பிடித்து மகரிஷியை ஏறிட்டு இரந்து நின்ற கோலத்தில் காட்சி தந்தார். இதே கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறார்.