தி. க. சுப்பராய செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 16:
பண்ருட்டியில் வாழ்ந்த பெரும் வணிகர் சேனைத்தலைவர் வணிகத்தார் மரபில் கஞ்சமலை செட்டியாருக்கு மகனாக பிறந்தார் .இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்.ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர் .பதினாறு அவதானம் செய்யும்படி மிகவும் குறிகிய காலத்தில் தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றவர் .
== சிறப்புகள் ==
மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தம் மாணவராகிய இவரைப் பதினாறு அவதானம் செய்யப் பழக்கிச் சபை கூட்டி அவதானம் செய்வித்துச், சோடசாவதனி எனும் பட்டத்தை வழங்கினார்.
 
இவர் எழுதிய 'விரிஞ்சேகர் சதகம்' பற்றி மற்றும் இவரை பற்றியும் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதிய சிறப்பு செய்யுள் பின்வருமாறு உள்ளது .
 
{{cquote|மாமேவு கற்பகப் பூந்தளிரும் நறுமலரும் வாட்டமற்
றெளிர வான்மேல்
மாலென வுயர்ந்துதழை சோலைபுடை சூழும்வள
வாணியம் பதிதழைப்பப்
பூமேவு மொருபாற் பசுங்கொடி தழைப்பவளர் பொற்றரு
வினிற்றழைத்த
பூரணி யிடப்பிரம காரணர் விரிஞ்சேகர் பொன்னங்
கழற்கணியெனப்
பாமேவு மொருசதகம் இனிது பாடுகவெனப் பரவுதம்பா
லேற்றவர்
பாலேவ மேற்பவருள் மால்வேங்க டப்பமுகில்
பரிவுற்று வந்துகேட்பத்
தூமேவு சொற்பொருள் நயம் பெறச் செய்தனன் துதிவீர
ராகவப்பேர்த்
தூயனருள் மைந்தன் நய மிகுசோட சவதானி
சுப்புராய புரவலனே" -|cquote}}
 
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
 
== பணிகளும் படைப்புகளும் ==
இவர் சென்னை அரசாங்கத்து, நார்மல் பாடசாலைத் தமிழ்ப் புலவராக இருந்துள்ளார். விரிஞ்சேகர் சதகம் எனும் நூலை இயற்றியுள்ளார். சந்தனபுரி என வழங்கும் எயினனூர் ஆதிபுரத் தலபுராணத்தை இயற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/தி._க._சுப்பராய_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது