1505 ஆம் ஆண்டில் லுாதர்லூதர் தனது வாழ்வையே மாற்றியமைக்கும், துறவு வாழ்க்கை எனும் புதிய பயணத்தைத் தொடங்கப்போகும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு கடுமையான இடி, மின்னல், புயலுடன் கூடிய மழையொன்றில் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் தனது வாழ்வு குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. லுாதர்லூதர் புனித ஆன் அன்னையிடம் ”புனித ஆனே என்னைக் காப்பாற்று, நான் ஒரு துறவுபூண்டு விடுகிறேன்” என்று அழுது வேண்டினார். புயல் அடங்கி அமைதி நிலை ஏற்பட்டது. லுாதரின்லூதரின் வாழ்வு காப்பாற்றப்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள் இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் அல்ல என்றும், இது லுாதரின்லூதரின் மனத்தில் முன்னதாகவே இருந்த எண்ணத்தின் விளைவு தான் என்றும் நம்புகின்றனர். இந்த முடிவானது மிகவும் கடினமானதாகவும், மார்ட்டின் லுாதரின்லூதரின் தந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது.<ref name="Martin Luther">{{cite web | url=https://www.biography.com/people/martin-luther-9389283 | title=Martin Luther | publisher=Biography.com | accessdate=21 அக்டோபர் 2017}}</ref>