சமயச் சார்பின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
== வரலாறு ==
ஐரோப்பாவில் நிலப்பிரபுத்துவ அரசுகள் அகற்றபட்டு, அந்த இடத்துக்கு முதலாலித்துவ அரசுகள் வந்தன. அப்போது ஐரோப்பிய நாடுகளில் மத ஆதிக்கத்தின் பிடியிலிருந்து அரசை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடந்ன. அப்போது , ''Secularism'' என்கிற வார்த்தையை முதன்முதலாக 1851ஆம் ஆண்டில் பயன்படுத்தியவர் ஆங்கிலேய எழுத்தாளர் [[ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக்]] .<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77964 | title=நாட்டின் நாடித்துடிப்பு மதச்சார்பின்மையே! | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=6 செப்டம்பர் 2014 | accessdate=6 செப்டம்பர் 2014 | author=தே. இலட்சுமணன் | pages=3}}</ref> இதன்பிறகு முதலாலித்துவ அரசுகளில் அரசனும் அரசும், சமயமும் தனித்தனியாக பிரிக்கபட்டன. சந்தை, அதன் வரிவாக்கம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் கவலைப்படுவதாக முதலாலித்துவ அரசுகள் இருந்தன. சமய சார்பற்ற தன்மை இதற்கு உதவிபுரிவதாக இருந்த இந்த நேரத்தில் சமயம் அத்தகைய உதவியை செய்வதாக அமையவில்லை. இதனால் மேற்கத்திய நாடுகளில் நிலப்பிரபுத்தவ அரசுகள் தூக்கி எறியபட்டன.<ref name="சிந்தனையாளன்2019"/>
 
== அரசியல் கொள்கையாக இருக்கிறது ==
வரிசை 15:
 
== இந்திய நிலைமை ==
1947 இல் [[இந்தியப் பிரிப்பு|இந்திய விடுதலையின்போது]] இந்தியா சமய அடிப்படையில் இந்தியா, [[பாக்கித்தான்]] என சமய அடிப்படையில் இரண்டாக பிரிக்கபட்டது. பிரிவினையின்போது இந்து முசுலீம் கலவரங்கள் ஏற்பட்டன. பாக்கித்தான் தன்னை இசுலாமிய குடியரசு என்று அறிவித்துக்கொண்டபோது. இந்தியா தன்னை சமய சார்பற்ற நாடு என்று அறிவித்துக்கொண்டது. இந்திய அரசியல் அமைப்பின் கட்டமைப்பும், அதில் உள்ள பலவேறு விதிகளும் ''இந்தியா என்பது சமய சார்பற்றதொரு அரசு'' என்று தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன.<ref name="சிந்தனையாளன்2019"/>
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் உள்ள 14ஆவது, 15ஆவது, 16ஆவது சரத்துகள் சமயத்தின்பேரல், நாட்டின் குடிமக்கள் எவருக்கு எதிராகவும் பாரபடசமான போக்கை கடைபிடிப்பதைத் தடை செய்வதோடு, பொது வேலை வாய்ப்புகளில் சமமான வாய்ப்புகள், சமமான சட்டப்பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்கின்றன. மேலும் 15ஆவது சரத்து சமயத்தின் பெயராலோ, சாதியின் பெயராலோ குடிமக்களில் எவர் மீதும் செயலற்றதன்மை, வெறுப்பு, கட்டுப்பாடு அல்லது நிபந்தனை ஆகியவற்றை கீழ்கண்ட விடயங்களில்ல் சுமத்தபடக்கூடாது என்றும் அறிவிக்கிறது;
"https://ta.wikipedia.org/wiki/சமயச்_சார்பின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது