இரங்கிதரங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"RangiTaranga" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
17:12, 29 ஏப்பிரல் 2020 இல் நிலவும் திருத்தம்
ரங்கிதரங்கா (ஆங்கிலம்: நிறமான அலை ) ஒரு 2015 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளிவந்த மருமம் நிறைந்த திரைப்படம். இதனை அனூப் பந்தாரி எழுதி, இயக்கியுள்ளார். ஸ்ரீ தேவி எண்டர்டேன்ர்ஸ் பெயரின் கீழ் எச்.கே.பிரகாஷ் உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் நிரூப் பந்தாரி, ராதிகா சேத்தன், அவந்திகா ஷெட்டி மற்றும் சாயிகுமார் போன்றோர் முதன்மை நடிகர்களாவர். இக்கதையின் சில காட்சிகள் துளுவ நாட்டு மரபினை எடுத்துக்காட்டுகிறது.
கதைக்களம்
உதகையில் கௌதம் என்பவர் சுற்றத்திலிருந்து தனித்து வாழ்ந்து வரும் எழுத்தாளராவார். தன் மனைவிக்கு உரக்கத்தில் தோன்றும் கெடுங்கனவுகளை தவிர்க்க மனைவின் சொந்த ஊரான கமரொட்டுவின், மரபு வீட்டில் சில வழிபாடுகளை மேற்க்கொள்ள இருவரும் விரைகின்றனர்.
அவ்வூரின் அஞ்சல் நிலைய மேலாளர் கலிங்கா, பள்ளிக்கூட ஆசிரியர் போன்றோரின் நட்பினைப் பெற்ற கௌதம், தாம் தங்கியுள்ள வீட்டில் நிலவும் மரும கதையை அறிகிறார்.
இதற்கிடையில், அனஷ்கு எனும் புனைப்பெயரின் பின் இருப்பவர் கௌதம் எனவறியாது, அவரைத் தேடி கமரொட்டு ஊருக்கு சந்தியா எனும் இளம்பெண் விரைகிறார்.
பின் தனது மனைவி காணாது செல்ல, அவரை தேடி அலையும் கௌதமை கண்டறிந்து, அவரது தேடலுக்கு உதவுகிறார் சந்தியா.
ஈற்றில், பல திருப்பும்களைக் கொண்டு கௌதம், தாம் மெய்யாக யார், கமரொட்டு ஊரில் இருக்கும் மருமம் யாதென அறிந்து, தனது மனைவியையும் காப்பாற்றுகிறார்.
நடிகர்கள்
- நிரூப் பந்தாரி - கௌதம் / சித்தார்த்
- ராதிகா சேத்தன் - இந்து / ஹரினி
- அவந்திகா ஷெட்டி - சந்தியா
- சாயிகுமார் - தெங்கபவில் இரவிந்திர கலிங்க பட்டா