முகேசு பத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"'''புக்ராசு பாப்னா''' ''(Pukhraj Bafna..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:04, 3 மே 2020 இல் நிலவும் திருத்தம்
புக்ராசு பாப்னா (Pukhraj Bafna) என்பவர் ஒரு இந்திய குழந்தை மருத்துவர் மற்றும் இளம்பருவ சுகாதார ஆலோசகர் ஆவார்.இவர் பழங்குடி குழந்தை மற்றும் இளம்பருவ ஆரோக்கிய மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகள் செய்தார்.[1]இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்ம சிறீ விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றவராவார்.[2][3]
வாழ்க்கை
புக்ராசு இந்திய மாநிலமான ராஜ்நந்துகாவுன் சத்தீசுகர் மாவட்டத்தில் உள்ள ராசுநந்துகாவுன் என்ற ஊரில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். [1] at Rajnandgaon, in the Indian state of Chhattisgarh.[4]சபல்பூரில் உள்ள நேதாசி சுபாசு சந்திரபோசு மருத்துவக் கல்லூரியில் 1969 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் 1972 ஆம் ஆண்டில் குழந்தை மருத்துவத்தில் பட்டமும் மற்றும் முதுகலை மருத்துவ பட்டத்தை 1973 ஆம் ஆண்டில் பெற்றார். [1][5]பிறகு லாட்னூனில் உள்ள செயின் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். [1][5]
புக்ராசு இந்திய பழங்குடி குழந்தைகள் ஆரோக்கியத்தின் நிலை என்ற புத்தகத்தை எழுதி அனைவராலும் அறியப்பட்டார். அவர் 1973 ஆம் ஆண்டு முதல் சபேரா சாங்கெட் எனும் இந்தி மொழி செய்தித்தாளில் சுகாதாரம் பற்றிய கட்டுரைகளை 40 ஆண்டுகளாக எழுதி வந்தார்.[6][7] மேலும் புக்ராசு பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பல மாநாடுகளுக்கும் தலைமை தாங்கினார்.[1] He has also attended several seminars and has chaired many conferences.[1]
புக்ராசு 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான சுகாதார முகாம்களை நடத்தியுள்ளார். மேலும் சத்தீசுகர் மாவட்டதில் உள்ள பசுதர் என்ற ஊரில் 149 அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளித்தார். இக் குழந்தைகளின் பெற்றோர்கள் போர்களத்தில் உயிரை இழந்தவர்களாவர்.[1] புக்ராசு சத்தீசுகரின் ராசுந்துகாவுன் நகரில் வசித்தார்.[8]
விருதுகள்
புக்ராசு 1978 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ சங்கம் வழங்கிய தேசிய சி. டி. தக்கார் விருதும் மற்றும் 1986 ஆம் ஆண்டில் பெக்கான் சர்வதேச விருதையும் இவர் பெற்றார்.[1] மேலும் டைம்சு ஆப் இந்தியா குழுமத்திலிருந்து மகாவீர் மகாத்மா விருது மற்றும் 2004 ஆம் ஆண்டில் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகத்தில் கல்வியாளர் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.[1] சமண விசுவ பாரதி பல்கலைக்கழகம் ராசத்தான் மற்றும் கேரள அரசின் சிறந்த குடிமகன் விருதை வழங்கி இவரை கவுரவித்தது. 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][4]
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "AACCI". AACCI. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ 2.0 2.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
- ↑ "Tribune". Tribune. 1 January 2008. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ 4.0 4.1 "Chhattisgarh News". Chhattisgarh News. 24 March 2011. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ 5.0 5.1 "SMHRC". SMHRC. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ "Savera Sanket". Chhattisgarh News. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ "Sabera Sanket". IU Raipur. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.
- ↑ "Parenting Nation". Parenting Nation. 2014. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.