இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
லண்டன் ராயல் நாணயவியல் சங்கம் வழங்கிய கவுரவத்தையடுத்து, கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 1998 ஜூலை 20ல், ஈரோட்டில், ஆர்கே.,க்கு பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தன; நினைவுப் பரிசுகளும் வழங்கின.
லண்டன் ராயல் நாணயவியல் சங்கம் கவுரவ உறுப்பினர் பதவி கொடுத்ததை அடுத்து, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 1998ல் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லுாரி பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது.
திருக்கோவிலுார் பண்பாட்டுக் கழகம், 1998 மே மாதம், ‘கபிலவாணர் விருது’ வழங்கி
திருச்சிராப்பள்ளி நாணயவியல் ஆய்வுக்கழகம், ஆர்கே.,க்கு, 1999 பிப்ரவரியில், ‘நாணயவியல் ஆய்வுச்செம்மல்’ என்ற பட்டம் வழங்கிக் கவுரவித்தது.
ஆர்கே.,யின் சமூகத்தொண்டு மற்றும் இதழியல் தொண்டுகளைப் பாராட்டி, 2000 ஏப்ரலில், ‘மெட்ராஸ் தெலுங்கு அகாடமி’ என்ற அமைப்பு, ‘யுகாதி புரஸ்கார் –2000’ என்ற விருது வழங்கிக் கவுரவித்தது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள, ‘செண்பகம் தமிழ் அரங்கு’ என்ற அமைப்பு, 2001 ஜனவரியில்
அறிஞர்கள், அமைப்புகள் மூலம் அளித்த கவுரவம் ஒரு புறம். இந்திய அரசும், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தியின் ஆய்வுப் பணிகளைப் பாராட்டி உயர்ந்த பீடத்தில் அமர்த்தியுள்ளது.
கணினித் தமிழுக்கு, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி, ‘கணித்தமிழ் சங்கம்’ அக்டோபர், 2005ல், ‘கணித்தமிழ் விருது’ வழங்கிக் கவுரவித்துப் பாராட்டியது.
தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் வெள்ளிவிழா ஆய்வரங்கு, 2018 அக்டோபர், 8ல் நடந்தது. அதில், ஆர்கே.,யின் வரலாற்று ஆய்வுப்பணிகளைப் பாராட்டி கவுரவிக்கும் விதமாக, ‘தமிழ்நாடு வரலாற்றியல் அறிஞர்’ என்ற பட்டத்தை, தமிழக வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் குழு வழங்கியது.
வாரணாசியில் உள்ள இந்திய நாணயவியல் கழகம், 102ம் ஆண்டு மாநாட்டை, கோவாவில் நடத்தியது. அந்த மாநாட்டில், முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்தியின் நாணயவியல் பங்களிப்புகளைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், அவர் செய்துள்ள ஆய்வுகளைச் சிறப்பித்தும், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்க முடிவு செய்தது. இந்த விருது வழங்கும் வைபவம், தென்னிந்திய நாணயவியல் சங்கம், சென்னையில் நடத்திய, 29ம் ஆண்டு மாநாட்டின்போது நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுனர், பன்வாரிலால் புரோகித், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முனைவர், இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கவுரவித்தார். இந்த நிகழ்ச்சி, 2019 ஜனவரி, 6ம் தேதி நடந்தது.
|