ஈரோடு மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 59:
பின்னர் 1980ஆம் ஆண்டு அதே 8.4ச.கி.மீட்டரில் எந்த விரிவாக்கமும் செய்யப்படாமல் சிறப்பு நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர், மக்கள்தொகைப் பெருக்கமும் நகரமயமாதலும் அதிகப்படியாக இருந்ததால், 2004 ஆம் ஆண்டு ஈரோடு நகராட்சியைச்சுற்றியிருந்த வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி, காசிபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
அதன்பின் 2007ஆம் ஆண்டின் அரசு அறிவிப்பைத் தொடர்ந்து 01.01.2008 முதல், ஈரோடு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டபோது, அப்போதைய நகராட்சி எல்லையான 8.4ச.கி.மீட்டர் பகுதியை மட்டும் உள்ளடக்கி செயல்படத்துவங்கியது. பிறகு, 2010ஆம் ஆண்டு தனி அதிகாரி மூலம் பழைய நகர்ப்பகுதியை ஒட்டியிருந்த [[வீரப்பன்சத்திரம்]], [[பெரியசேமூர்]], [[சூரம்பட்டி]], [[காசிபாளையம்(ஈரோடு)]] ஆகிய நகராட்சிகளையும், பிராமணபெரிய அக்ரஹாரம், [[சூரியம்பாளையம்]] ஆகிய பேரூராட்சிகளையும், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, [[திண்டல்]], முத்தம்பாளையம், 46-புதூர், லக்காபுரம் ஆகிய ஊராட்சிகளையும் இணைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இருப்பினும், அப்போதைய சூழலில் லக்காபுரம் மற்றும் 46-புதூர் ஊராட்சிகள் இதற்கு ஒப்புதல் அளிக்காததால், இவ்விரண்டு பகுதிகளும் நீக்கப்பட்டு ஏனைய பகுதிகளை உள்ளடக்கி 2011 முதல் ஈரோடு மாநகராட்சியானது 109.52ச.கி.மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சுமார் 5,21,000 மக்கள் வசிக்கின்றனர்.
==மாநகராட்சி விரிவாக்கம் ==
மேலும் நகரின் தொடர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, 2016ல் மாநகரை ஒட்டியுள்ள வளர்ச்சியடைந்த பகுதிகளான காலிங்கராயன்பாளையம், மேட்டுநாசுவன்பாளையம், சித்தோடு, லக்காபுரம் மற்றும் 46புதூர் ஆகிய உள்ளாட்சிகளை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்ததால் இந்த இணைப்பு செயல்படுத்தப்படாமல் உள்ளது. தற்போது புறநகர்ப்பகுதிகளாக உள்ள இந்தப்பகுதிகளில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 60,000 மக்கள் வசிக்கின்றனர்.
{| border="1"
|