அணுக்கரு ஆயுதங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
துப்புரவு
வரிசை 5:
{{convert|2400|lb|kg|sigfig=2}} திணிவுடைய ஒரு ஐதரசன் குண்டு, 1.2 மில்லியன் தொன் TNTயின் வெடிப்பின்போது வெளியிடப்படும் சக்தியிலும் அதிக சக்தியை வெளியிடக்கூடியது. ஆகவே, பாரம்பரியமான ஒரு குண்டிலுஞ் சிறிய அணுவாயுதம் வெடிப்பு, தீ மற்றும் கதிர்ப்பு ஆகியவற்றின் மூலமாக ஒரு நகரத்தையே அழிக்கக் கூடியது. [[அணுவாயுதம்|அணுவாயுதங்கள்]] பேரழிவு ஆயுதங்களாகக் கருதப்படுவதோடு, இவற்றின் பயன்பாடும் கட்டுப்பாடுகளும் சர்வதேச உறவுகளில் பெரிய தாகத்தை ஏற்படுத்த வல்லன.
 
இரண்டு அணுவாயுதங்கள் மாத்திரமே இதுவரை போரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையிரண்டும் [[ஐக்கிய அமெரிக்கா]]வால் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பயன்படுத்தப்பட்டன. ஆகஸ்ட் 6, 1945 அன்று, "சின்னப் பையன்" எனப் பெயரிடப்பட்ட [[யுரேனியம்]] கருப்பிளவு அணுகுண்டு சப்பானிய நகரமான [[இரோசிமா]]வில் வீசப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின், ஆகஸ்ட் 9 அன்று "குண்டு மனிதன்" எனப் பெயரிடப்பட்ட [[புளூட்டோனியம்]] கருப்பிளவு அணுகுண்டு இன்னொரு [[சப்பான்|சப்பானிய]] நகரான [[நாகசாகி]]யில் வீசப்பட்டது. இவ்விரு குண்டுகளின் காரணமாக ஏற்பட்ட கடுமையான காயங்களினால் கிட்டத்தட்ட 200,000 மக்கள் இறந்தனர்.<ref>{{cite web |url = http://www.rerf.or.jp/general/qa_e/qa1.html |title = Frequently Asked Questions #1 |publisher=[[Radiation Effects Research Foundation]] |quote=total number of deaths is not known precisely ... acute (within two to four months) deaths ... Hiroshima ... 90,000-166,000 ... Nagasaki ... 60,000-80,000 | accessdate = Sept. 18, 2007}}</ref> சப்பானின் சரணடைவிலும் அதன் சமூக நிலையிலும் இக் குண்டுவீச்சுக்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்றும் முக்கிய விவாதப்பொருளாக விளங்குகிறது.
 
இரோசிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சின் பின், பரிசோதனை நோக்கத்துக்காகவும், செய்முறை விளக்கங்களுக்காகவும் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் அணுகுண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாடுகள் மட்டுமே அணுவாயுதத்தை கொண்டுள்ளனவாக அல்லது அணுவாயுதத்தைக் கொண்டுள்ள நாடுகளாகச் சந்தேகிக்கப்படுவனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்ட நாடுகளாக (முதற்பரிசோதனைக் காலவரிசைப்படி) ஐக்கிய அமெரிக்கா, [[சோவியத் ஒன்றியம்]], [[ஐக்கிய இராச்சியம்]], [[பிரான்ஸ்]], [[சீனா]], [[இந்தியா]], [[பாகிஸ்தான்]] மற்றும் வட கொரியா ஆகியன அறிவித்துள்ளன. இஸ்ரேல் அணுவாயுதப் பரிசோதனை மேற்கொண்டிருப்பினும் அது பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.<ref name="nuclearweapons1">{{cite web|url=http://www.fas.org/programs/ssp/nukes/nuclearweapons/nukestatus.html |title=Federation of American Scientists: Status of World Nuclear Forces |publisher=Fas.org |date= |accessdate=2012-12-29}}</ref><ref>{{cite web|url=http://www.fas.org/nuke/guide/israel/nuke/index.html |title=Nuclear Weapons – Israel |publisher=Fas.org |date=Jan 8, 2007 |accessdate=2010-12-15}}</ref><ref>See also [[Mordechai Vanunu]]</ref> தென்னாபிரிக்கா முன்பு அணுவாயுதங்களை உற்பத்தி செய்திருப்பினும், அதன் இனவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்தபின் தனது ஆயுதங்களை அழித்ததுடன் அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டது.<ref>{{cite web|url=http://www.fas.org/nuke/guide/rsa/nuke/index.html |title=Nuclear Weapons – South Africa |publisher=Fas.org |date=May 29, 2000 |accessdate=2011-04-07}}</ref>
வரிசை 11:
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பின் மதிப்பீட்டின்படி 2012 அளவில் உலகில் 17,000க்கும் மேற்பட்ட அணுவாயுதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கிட்டத்தட்ட 4,300 ஆயுதங்கள் செயற்பாட்டு நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.<ref name="nuclearweapons1" />
 
== வகைகள் ==
 
அணுவாயுதத்தில் இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன. அவை அணுக்கருப் பிளவின் மூலம் மட்டும் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியன மற்றும் அணுக்கரு இணைவின் மூலம் தமது சக்தியைப் பிறப்பிக்கக்கூடியனவாகும். இவற்றுள் அணுக்கரு இணைவின் மூலம் இயங்கும் அணுவாயுதத்தில் தாக்கத்தை ஆரம்பிப்பதற்கான சக்தி அணுக்கருப் பிளவின் மூலம் வழங்கப்படும். இதன் விளைவாக உருவாகும் அணுக்கரு இணைவுத் தாக்கம் அதிகளவிலான சக்தியை வெளிப்படுத்தும்.
 
=== அணுக்கருப் பிளவு ஆயுதங்கள் ===
 
[[Fileபடிமம்:Fission bomb assembly methods.svg|upright=1.4|thumb|இரண்டு அடிப்படை கருப்பிளவு ஆயுத வடிவமைப்புக்கள்]]
 
பாவனையிலுள்ள அனைத்து அணுவாயுதங்களும் தமது வெடிப்புச் சக்தியில் சிறியளவான பகுதியை அணுக்கருப் பிளவுத் தாக்கங்களினால் பெறுகின்றன. தனியே அணுக்கருப்பிளவுச் சக்தியை மாத்திரம் வெளியிடும் ஆயுதங்கள் ''அணுகுண்டு'' எனப்படும்.
வரிசை 36:
}}</ref>
 
=== அணுக்கரு இணைவு ஆயுதங்கள் ===
 
[[Fileபடிமம்:Teller-Ulam device 3D.svg|thumb|ஐதரசன் குண்டுக்கான டெல்லர் உலம் வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகள்:பிளவுக்குண்டு மூலம் உருவாகும் கதிர்ப்பு இணைவு எரிபொருளை நெருக்கவும் வெப்பமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.]]
 
அணுவாயுதங்களில் மற்றைய அடிப்படை வகை அணுக்கரு இணைவின் மூலம் சக்தியை வெளிப்படுத்துவனவாகும். இவ்வாறான ஆயுதங்கள் ''வெப்ப அணுவாயுதங்கள்'' அல்லது ''ஐதரசன் குண்டுகள்'' எனப்படும். இவை ஐதரசனின் சமதானிகளுக்கிடையிலான (டியூட்டிரியம் மற்றும் டிரிடியம்) இணைவுத் தாக்கங்களில் தங்கியிருப்பதன் காரணமாக ''ஐதரசன் குண்டுகள்'' எனப்பட்டன. இவ்வனைத்து ஆயுதங்களும் அவற்றின் சக்தியில் குறிப்பிடத்தக்களவை அல்லது பெருமளவை கருப் பிளவுத் தாக்கங்களினூடாகவே பெற்றுக்கொள்கின்றன. ஏனெனின் இணைவுத் தாக்கங்களை மேற்கொள்வதற்கான தொடக்கியாக பிளவுத் தாக்கங்கள் பயன்படுத்தப்படுவதாலாகும்.<ref>Carey Sublette, [http://nuclearweaponarchive.org/Nwfaq/Nfaq4-5.html#Nfaq4.5.2 Nuclear Weapons Frequently Asked Questions: 4.5.2 "Dirty" and "Clean" Weapons], accessed 10 May 2011.</ref>
வரிசை 62:
அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்த நாடுகள் முறையே (காலமுறைபடி) [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]], [[இரசியா]], [[இங்கிலாந்து]], [[பிரான்சு]], [[சீனா]], [[இந்தியா]], [[பாக்கிஸ்தான்]] மற்றும் [[வட கொரியா]]. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை. உதாரணமாக, [[இஸ்ரேல்]] அணுஆயுதவான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக்கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணுஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, [[ஈரான்]] அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
 
== உலக அணுவாயுதப் போட்டி 1945-20071945–2007. ==
உலக வரலாற்றில், அணுவாயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காவுக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணுஆயுதப் பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணுஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா. இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணுஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஒப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தின் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியமையால், இந்த ஒப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஒப்பந்தத்தை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணுஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன. 1990 களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும், தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.
 
2005 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணுஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வளர்ந்த நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியலையை உருவாக்கியது. அக்டோபர் 9, 2005ல், வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.
 
== இவற்றையும் பார்க்க ==
 
== மேற்கோள்கள் ==
<references />
 
== உசாத்துணைகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://web.archive.org/web/20011128105653/http://www.cdi.org/nuclear/database/nukestab.html Current World Nuclear Arsenals] has estimates of nuclear arsenals in the respective countries.
*[https://neotamil.com/world/atom-bomb-war-facts-about-neuclear-weapons-india-pakistan-problem-effect-of-nueclear-war/ அணு ஆயுத போர் ஏற்பட்டால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் தெரியுமா?]
 
[[பகுப்பு:அணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அணுக்கரு_ஆயுதங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது