கம்பராமாயணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''இராமனது வரலாற்றைக் கூறும் நூல்''' இராமாயணம் எனப்பட்டது. கம்பராமாயணம் எனும் நூல் [[சோழர்|குலோத்துங்க சோழனின்]] ஆணைப்படி [[கம்பர்]] எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட [[தமிழ்]] நூலாகும். இந்நூல் [[இந்து சமயம்|இந்து சமய]] [[இதிகாசம்|இதிகாசங்கள் இரண்டினுள்]] ஒன்றான [[இராமாயணம்|இராமாயணத்தினை]] மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும். இது வடமொழியில் [[வால்மீகி]] என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச்சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர்<sub>,</sub> தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். {( "வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே " ) ([[தொல்காப்பியம்]], எச்சவியல், 5)}
 
மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால் , இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
 
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், நூற்றுப்பதின்மூன்று (113)123 படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.
 
கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு.
வரிசை 27:
== அமைப்பு ==
{{முதன்மைக் கட்டுரை|கம்பராமாயணத்தின் அமைப்பு}}
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 113123 படலங்களையும், 10,500 பாடல்களையும் கொண்டவை.<ref name="tamilvu.org"/>
 
{| class="wikitable sortable"
வரிசை 33:
! வ.எண் !! காண்டங்களின் பெயர் !! படல எண்ணிக்கை
|-
| 1 || பாலகாண்டம் || 2224
|-
| 2 || அயோத்தியா காண்டம் || 1213
|-
| 3 || ஆரண்ய காண்டம் || 1113
|-
| 4 || கிட்கிந்தா காண்டம் || 17
|-
| 5 || சுந்தர காண்டம் || 1514
|-
| 6 || யுத்த காண்டம் || 3942
|}
 
"https://ta.wikipedia.org/wiki/கம்பராமாயணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது