எஸ். மீனாட்சிசுந்தர முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வாழ்க்கைக் குறிப்பு: ஈரோடு பெண்கள் கல்விக்காக பாட்டுப்பாட்ட எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் பக்கம் உருவாக்கப்பட்டது.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(வேறுபாடு ஏதுமில்லை)

12:16, 22 மே 2020 இல் நிலவும் திருத்தம்

எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் அல்லது ஈரோடு மீனாட்சிசுந்தர (25.12.1898 - 14.03.1973) ஓர் இந்திய கல்வியாளரும் அரசியல்வாதியும் மக்கள் சேவகரும் ஆவார். இவர் ஈரோடு வட்ட பெண்கள் கல்விக்காக பாட்டுப்பாட்டவர். இவர் ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தவர். மக்கள் இவரை "ஐயா" என்று அன்போடு அழைப்பார்கள்.[1] [2]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1898 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் வசதிவாய்ந்த ஓர் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதில் இருந்து கல்வியில் ஆர்வம் காட்டிய இவர் இளங்கலை இலக்கியம் வரை படித்தார்.

1952 முதல் 1955 வரை ஈரோட் நகராட்சித் தலைவராக பணியாற்றி பல நல்ல மக்கள் திட்டங்களை செயல்படுத்தினார்.[3]

பெண்கள் கல்வி வளர்ச்சியில் தான் சமூகத்தின் வளர்ச்சி உள்ளது என்பதை அறிந்த முதலியார், தனது சொந்த செலவில் கலைமகள் கல்வி நிலையம் என்ற பெங்கள் பள்ளியை ஆரம்பித்து லட்ச்சக்கணக்கான பெண்களுக்கு கல்வி சேவையை செய்தார்.

வரலாற்றிலும் ஆர்வம் உள்ள இவர் ஈரோட்டில் கலைமகள் அருங்காட்டியகத்தையும் தொடங்கி வைத்தார். [4]

பிறகு ஈரோட்டில் செங்குந்தர் கல்விக்கழகம் என்ற அமைப்பை வி.வி.சி.ஆர். முருகேச முதலியார், ஜ. சுத்தானந்தன் முதலியார் உள்ளிட்டோருடன் சேர்ந்து ஆரம்பித்தார். இன்று செங்குந்தர் கல்விக்கழகம் பத்திற்க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளை இயக்கி வருகிறது.[5]

1972 ஆம் ஆண்டில் சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட "கலைமகல் கல்வி நிலயம்" நிர்வாகக் குழு 7 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பொது அறக்கட்டளையை உருவாக்கி, இவரின் கலைமகள் கல்வி நிலையத்தை ஈரோடு பொது மக்களுக்கு அர்ப்பணித்தார்.

நினைவுகள்

இவரின் மக்கள் சேவையைப் பாராட்டும் வகையில் 2019 ஆம் ஆண்டு ஈரோட்டின் பிரதான சாலைக்கு மீனாட்ச்சிசுந்தரனார் சாலை என்று பெயர் வைத்தது.[6]

ஈரோடு செங்குந்தர் கல்விக்கழகம் இவரின் நினைவாக மீனாட்ச்சிசுந்தரனார் செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி என்ற பயரில் ஓர் பள்ளியை நடத்தி வருகிறது.[7]

மேற்கோள்கள்

  1. "About Kalaimagal" (in ஆங்கிலம்). Erode Kalaimakal Kalvi nilayam school.
  2. "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்". தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண். 2012.
  3. "About Kalaimagal" (in ஆங்கிலம்). Erode Kalaimakal Kalvi nilayam school.
  4. "கலைமகள் பள்ளி அருங்காட்சியகம்". தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண். 2012.
  5. "செங்குந்தர் கல்விக்கழக நிறுவனர்களின் சிலை திறப்பு விழா" (in தமிழ்). தினமணி. 2012. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/2012/mar/04/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-466034.html. 
  6. "மீனாட்சி சுந்தரனார் சாலை பெயர் பலகை திறப்பு" (in தமிழ்). தினகரன். 2019. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=969352. 
  7. "சுத்தானந்தன் பிறந்த நாள் விழா" (in தமிழ்). தினமலர். 2012. https://m.dinamalar.com/detail.php?id=555600.