இவர் தனது தந்தையின் சொந்த இல்லமான [[கோபாலபுரம் (சென்னை)|கோபாலபுர]]த்தில் 30-1-1950-ல் ஆம் ஆண்டு [[மு. கருணாநிதி|கருணாநிதி]]-[[தயாளு அம்மாள்]] இணையாருக்கு முதல் மகனாக பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 3 பேர் மு. க. செல்வி என்ற ஒரு தங்கையும். பின்பு இவருடைய இரண்டாவது சகோதரர் முன்னாள் துணை முதல்- அமைச்சர் [[மு.க.ஸ்டாலின்]], மற்றும் மூன்றாவது சகோதரர் [[மு. க. தமிழரசு]], ஆகியோர் ஆவார்கள். மு.க. அழகிரி, பள்ளிப்படிப்பை உள்ளூரிலேயே படித்தார். பி.ஏ.வரலாறு பட்டப்படிப்பை சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான காந்தி என்பவரை இவர் மணந்துகொண்டார். இவர்களுக்குக் கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். துரை என்கிற தயாநிதி இவர்களது ஒரே மகன். மு.க.அழகிரி 1980-ம் ஆண்டு [[முரசொலி]] பத்திரிகையைக் கவனித்துக்கொள்வதற்காக, சென்னையில் இருந்து [[மதுரை]]க்கு வந்தார். அது முதல் [[மதுரை]]யிலேயே தங்கிவிட்ட அழகிரி, மதுரை சத்தியசாய் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.{{cn}}