'''எம். பி. வீரேந்திர குமார்''' (''M. P. Veerendra Kumar'') என்பவர் ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர் ஆவார். மேலும் இவர் [[பதினான்காவது மக்களவை|14 வது மக்களவை]] [[இந்திய மக்களவை உறுப்பினர்|உறுப்பினராக]] இருந்தார். லோக்தாந்த்ரிக் ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் அக் கட்சியின் [[கேரளம்|கேரள]] மாநில பிரிவின் தலைவராக இருந்தார். மலையாள நாளேடான ''[[மாத்ருபூமி (இதழ்)|மாத்ருபூமியின்]]'' தலைவராகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். கேரளத்தின் கோழிக்கோட்டில் மாரடைப்பு காரணமாக 2020 மே 28 அன்று இவர் இறந்தார்.
== வாழ்க்கை ==
இவர் சோசலிஸ்ட் கட்சியின் தலைவரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பத்மபிரபா கவுடருக்கும் மருதேவி அவ்வா ஆகிய இணையருக்கு மகனாக 1936 சூலை 22 அன்று [[கல்பற்றா|கல்பற்றாவில்]]வில் உள்ள ஒரு பிரபலமான [[சைனம்|சமண]] குடும்பத்தில் பிறந்தார். [[கல்பற்றா|கல்பற்றாவிலும்]]விலும் [[கோழிக்கோடு|கோழிக்கோட்டிலும்]] பள்ளி படிப்பபை முடித்தத்த பிறகு, [[சென்னை|மதராசில்]] உள்ள [[இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி|இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தர் கல்லூரியில்]]யில் மெய்யியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தீவிர அரசியலில் ஈடுபட்ட இவர், முந்தைய சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சியின் பொருளாளர் மற்றும் தேசிய குழு உறுப்பினராகவும், சோசலிஸ்ட் கட்சியின் கேரள பிரிவின் மாநில செயலாளராகவும், முந்தைய சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர்களில் ஒருவராகவும், கேரள எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர், முந்தைய [[ஜனதா கட்சி|ஜனதா கட்சியின்]]யின் துணைத் தலைவராகவும், அதன் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். [[நெருக்கடி நிலை (இந்தியா)|நெருக்கடி நிலைக் காலத்தில்]] இவர் கைது செய்யப்பட்டார். 1987-91 காலக்கட்டத்தில் இவர் [[கேரள சட்டமன்றம்|கேரள சட்டமன்ற]] உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1996 இல் கோழிக்கோடு தொகுதியில் இருந்து [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] கீழவையான [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கு]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மாநில அமைச்சரவையில் தொழிலாளர் துறை அமைச்சராகவும், பின்னர் நிதி அமைச்சராகவும் செயல்பட்டார்.