தீபாவளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: கங்கை - link(s) தொடுப்புகள் கங்கை ஆறு உக்கு மாற்றப்பட்டன |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 41:
=== இந்து சமயத்தில் தீபாவளி ===
தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
* [[புராணங்கள்|புராணக்]] கதைகளின் படி, [[திருமால்]] [[வராக அவதாரம்]] (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான ([[பூமாதேவி]]க்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்) பின்பு அவன் இன்றைய [[அஸ்ஸாம்|அசாம் மாகாணத்தில்]] உள்ள [[பிராக்ஜோதிச நாடு|பிராக்ஜோதிசா]] என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான். பின்பு தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று [[பிரம்மன்]]னை நோக்கி கடும் தவம் புரிந்தான். அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், அப்போது பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான். பின்பு மனிதன் ஆக இருந்து ஒரு அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு [[நரகாசுரன்]] என்று பெயர் ஏற்பட்டது (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும். இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.
* [[இராமாயணம்|இராமாயண]] இதிகாசத்தில், [[இராமர்]], [[இராவணன்|இராவணனை]] அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி [[சீதை]]யுடனும் சகோதரன் [[இலட்சுமணன்|இலட்சுமணனுடனும்]], [[அயோத்தி]] திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
* [[கந்த புராணம்|கந்த புராணத்தின்]] படி, [[பார்வதி|சக்தி]]யின் 21 நாள் [[கேதாரகௌரி விரதம்]] முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் [[சிவன்]], சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.
|