'''தமிழ்த் தேசியத் தந்தை''' என்று அழைக்கப்படும் '''பாவலரேறு பெருஞ்சித்திரனார்''' (மார்ச் 10, 1933 – சூன் 11, 1995) [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை [[மறைமலை அடிகள்|மறைமலையடிகளார்]], மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். தமிழீழத் தேசியத்தலைவர் '''பிரபாகரன்''' தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். '''தமிழரசன்''' உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளுக்கு ஆதி காரணமாய் நின்றவரும் இவர்தாம். 20 முறை சிறை சென்றும், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. அனைத்துத் தமிழர்களாலும் இன்று '''தமிழ்த்தேசியத்தந்தை''' என்று போற்றப்படுகிறார்.