முத்தரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சேவற்கொடியோன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2984777 இல்லாது செய்யப்பட்டது
சேவற்கொடியோன் (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2984776 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 10:
 
== முத்தரையரின் தோற்றம் ==
முத்தரையரின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வென்ற [[களப்பிரர்]]களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி<ref>களப்பிரர் ஆட்சியில் தமிழகம், நாம் தமிழர் பதிப்பகம், மயிலை. சீனி. வேங்கடசாமி, ஏப்ரல் 2006.</ref>, டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். மேலும் எஸ்.கே. அய்யங்கார் சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே முத்தரையர் எனக் கொள்ள வேண்டும் என்கிறார்.
முத்தரையரை மூ + அரையர் என்று பிரித்து, முதற் சொல்லை 'மூன்று' என்று பொருள் கொள்வேமாயானால், தொல்காப்பியம் நன்னூல் போன்ற தமிழ் இலக்கண நூல்கள் கூறும் புணர்ச்சி விதிப்படி மூன்று+அரையர் = மூவரையர் என்றே ஆகவேண்டும். அவர்கள் மூவரையர் என எங்கும் அழைக்கப்பட்டதில்லை முத்தரையர் என்றே குறிக்கப்பெறுகின்றனர். ஆகவே முதற்சொல்லை 'முது' அல்லது 'மூத்த' என்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. குடுமியார்மலை போன்ற சில இடங்களில் இவர்கள் பெயரைக் கல்வெட்டுகள் மூத்த அரையர் எனப் பிரித்தே குறிக்கிறது. இதனை மூத்த + அரையர் எனப் படிக்க இயலாது. கல்வெட்டு மரபுப்படி இவ்விடங்களில் மூத்த அரையர் என்றே படிக்க வேண்டும்<ref name=":0">{{Cite web|url=http://tamilartsacademy.com/books/tavam/chapter44.xml|title=Tamil Arts Academy - Dr.R.Nagaswamy|last=|first=|date=|website=tamilartsacademy.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2020-06-11}}</ref>.
 
முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
"விருத்தராஜ" என்ற வட சொல் அடிப்படையில் முது அரசர் முத்தரசர் என்ற பெயர் கங்ககுல (சில) மன்னரிடம் காணப்படுகிறது<ref name=":0" />. கங்கர்கள், சோழர்களிடம் கொள்வினை கொடுப்பினையில் ஈடுபட்ட பொழுது இப்பெயர்களை அவர்கள் சூட்டிக்கொள்ளக் காண்கிறோம்<ref name=":0" />.
 
முதுகுடிகள் வம்பவேந்தருடன் (புதிய வேந்தர்களுடன்) போரிட்ட நிகழ்ச்சிகள் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. தொல்தேவரு என அழைக்கப்பட்ட முதுகுடி அரசர் பற்றிச் செங்கம் பகுதி நடுகற்கள்<ref name=":0" /> செய்தி பகர்கின்றன. மேலும் அரையர் நாட்டுச்சோழர்கள் ( இரேநாடு ), 'முதிராசு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527|volume=27|page=221}}</ref>' என்ற பெயர் கொண்டிருப்பது நோக்கத்தக்கது. எனவே முத்தரையர் என்ற சொல்லை, முது + அரையர் > முத்தரையர் என்று பொருள் கொள்வது சாலப்பொருந்துகிறது. மேலும் முத்தரையரும் களப்பிரரும் வேறனானவர்கள் என்பதை கல்வெட்டியல்.நடன.காசிநாதன் நிறுவியுள்ளார்<ref>{{Cite book|title=களப்பிரர்|url=https://www.tnarch.gov.in/e-publication-books?term_node_tid_depth=219|author=நடன.காசிநாதன்|publisher=Government ofTamilNadu, Department of Archeology}}</ref>.
 
இரேநாட்டுச் சோழரான எரிகால் முத்துராசு தனஞ்சயனின் முதல் பெயரன் குணமுதிதன் எனும் முதலாம் குவாவன் வழியில் வந்தவர்களே கிபி7ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளை ஆட்சி செய்த முத்தரையர்கள் என்பதை செந்தலைத் தூண் கல்வெட்டு<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56662/page/n168/mode/1up|page=139|volume=13}}</ref> மற்றும் இரேநாட்டுச் சோழர்கள் பற்றிய விரிவான கல்வெட்டு அறிக்கை<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n305/mode/1up|volume=27|page=220 முதல்}}</ref> மற்றும் அதன்கண் கொடுக்கப்பட்டுள்ள பத்து தலைமுறைக்கு மேலான கால்வழிபட்டியல்<ref>{{Cite book|title=Epigraphia indica|url=https://archive.org/details/in.ernet.dli.2015.56527/page/n338/mode/1up|volume=27|page=248}}</ref> மூலமாக அறியலாம். [[பாண்டியர்|பாண்டியரின்]] பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது.{{cn}}
 
== முத்தரைய அரசர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முத்தரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது