சா. தருமாம்பாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பிறப்பு: Fixed wrong link (Karanthai - Flower to Karunthittaikudi _ Place) |
|||
வரிசை 1:
{{refimprove}}
'''கரந்தை எஸ். தர்மாம்பாள்''' (1890 - 1959) தமிழக மருத்துவர். பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் அரும்பாடு பட்டவர்.
==பிறப்பு==
கரந்தை எஸ். தர்மாம்பாள் 1890 ஆம் ஆண்டு, [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கருந்திட்டைக்குடி|கரந்தையில்]] பிறந்தவர். அக்காலத்திலேயே [[சித்த மருத்துவம்]] பயினறு, மருத்துவராகப் பணியாற்றியவர்.
==பெண்கள் மாநாடு==▼
இவர் சமூகசேவையில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். விதவைகள் மறுமணம், கலப்பு மணம், பெண் கல்வி என இம்மூன்றிற்கும் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர், தன்அயரா உழைப்பினால், 1938 நவம்பர் மாதம் 13 ஆம் நாள், சென்னையில், தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டை நடத்தினார். [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] மகள் திருவரங்க நீலாம்பிகை அம்மையாரை அழைத்து, இம்மாநாட்டிற்குத் தலைமையேற்க வைத்தார்.
இம்மாநாட்டிலேயே, [[ஈ. வெ. இராமசாமி]] அவர்களுக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப் பெற்றது.<ref>https://commons.wikimedia.org/wiki/File%3AKudiyarasu.jpg</ref>
==இழவு வாரம்==
தமிழாசிரியர்களுக்கு மட்டும், குறைவான ஊதியம் வழங்கப்படுவதைக் கண்டித்து, 1940 ஆம் ஆண்டில் இவர் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினார். இப்போராட்டத்திற்கு இவர் வைத்த பெயர் இழவு வாரம். இப்போராட்டத்தின் பலனாக அன்றைய கல்வி அமைச்சர் [[தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார்]] தமிழாசிரியர்களுக்கும், மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க உத்தரவிட்டார்.
1938 ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராக மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறைக்கும் சென்றார்.
==மாணவர் மன்றம்==
▲==பெண்கள் மாநாடு==
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் தமிழறிவை வளர்க்கவும், அரசுத் தேர்வுகளில் நல்லமதிப்பெண் பெறவும், பேச்சாற்றலை, எழுத்தாற்றலை வளர்க்கவும் உருவாக்கப்பெற்ற மாணவர் மன்றத்தின், தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார்.
==ஏழிசை மன்னர்==
அக்காலத்தில், தமிழ்த் திரை உலகின் சக்கரவர்த்தியாக விளங்கிய, நடிப்பு, பாட்டு என கொடிகட்டிப் பறந்த, எம்.கே.தியாகராச பாகவதர் அவர்களுக்கு ஏழிசை மன்னர் என்னும் பட்டம் வழங்கியவர் இவர்.<ref>https://web.archive.org/web/20080704184403/http://raja1630.tripod.com/mktb/id16.html</ref>
==பட்டங்கள்==
பெண்களின் விடுதலைக்காகவும், தமிழ் மொழிக்காகவும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட தர்மாம்பாளுக்கு, அன்றைய தமிழர்கள் வீரத் தமிழன்னை என்னும் பட்டத்தினை வழங்கினர்.
==மறைவு==
தர்மாம்பாள் அவர்கள், தனது 69 ஆவது வயதில்,1959 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
==புகழாரம்==
கரந்தை எஸ்.தர்மாம்பாளின் நினைவினைப் போற்றும் வகையிலும், அவர்களது தொண்டினைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழக அரசு, இவரது பெயரிலேயே, டாக்டர் தர்மாம்பாள் அரசு பெண்கள் பாலிடெக்னிக் ஒன்றினைத் தொடங்கி நடத்தி வருகின்றது.<ref>http://www.polytechniccolleges.in/tamilnadu/chennai-madras/drdharmambal-government-polytechnic-college-women-drdgpcw-madrasapattinam</ref>
சென்னை மாணவர் மன்றம் தர்மாம்பாளை நினைவு கூரும் வகையில் ஒரு நடுநிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. சென்னை மாநகராட்சி இவரது பெயரில் ஒரு பூங்காவை அமைத்துள்ளது.
==மேலும் பார்க்க==
நித்திலக் குவியல், மாத இதழ் அக்டோபர் -2017
{{Reflist}}
[[பகுப்பு:பெண்ணியவாதிகள்]]
▲==மேற்கோள்கள்==
[[பகுப்பு:இந்திய மருத்துவர்கள்]]
▲[[பகுப்பு:சித்த மருத்துவர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:
|