திருத்தணி முருகன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 41:
 
== தல வரலாறு ==
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த [[சூரபத்மன்|சூரபத்மனுடன்]] போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, [[வள்ளி (தெய்வம்)|வள்ளியை]] மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும் இது முற்காலத்தில் திருவேரகம் என அழைக்கப்பட்டது. முருகப்பெருமான்ஆகையால் கோபம் தணிந்து சாந்தமாக இருக்கும் இடம்,அதனால் கந்த சஷ்டி விழா நடைபெறுவது இல்லை.இந்த தலம் ''தணிகை'' எனப் பெயர் பெற்றது. தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது. முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
 
இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது. ''சரவணப் பொய்கை'' என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும். அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் [[அருணகிரிநாதர்]] இதை ''அழகு திருத்தணி மலை'' எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தணி_முருகன்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது