கேரள அரசு சின்னமானது [[கொச்சிதிருவாங்கூர்]] இராச்சிய அரசு சின்னத்தில் இருந்து வந்ததாகும்.{{Citation needed}} இந்த அரச சின்னமானது , இரண்டு யானைகள் [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|ஸ்ரீ பத்மநாபனின்]] சங்கை காப்பது போல அடையாளப்படுத்துகிறது. அந்த சங்குக்கு மேலே இந்திய தேசிய சின்னமாகிய [[அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி|சாரநாத் சிங்கம்]] காணப்படுகிறது. இது இந்தியாவின் பெரும்பாலான மாநிலச் சின்னங்களில் பொதுவாக காணப்படுவதாகும். சின்னத்தின் அடிப்பகுதியில் [[பிரகதாரண்யக உபநிடதம்|பிரகதாரண்யக உபநிடதத்தில்]] உள்ள சமசுகிருத வாக்கியம் [[தேவநாகரி]]யில் உள்ளது. இதன் பொருள் "May light spell away darkness". தற்போதைய கேரள சின்னமானது [[ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|கம்யூனிஸ்ட் ஆட்சியை]] இந்திய நடுவண் அரசு அகற்றியபின் 1960 இல் பதவிக்கு வந்த [[பட்டம் தாணு பிள்ளை]]யின் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னமாகும்.