மட்டக்களப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 17 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன () |
|||
வரிசை 59:
| footnotes =
}}
'''மட்டக்களப்பு''' ({{lang-en|Batticaloa}}, {{lang-si|මඩකලපුව}}) [[இலங்கை]]யின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு மாவட்ட]]த்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாகத் [[திருகோணமலை]], [[பொலன்னறுவை]], [[அம்பாறை]] ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன. [[கொழும்பு|கொழும்பிலிருந்து]] இது 301 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<ref>
== சொல்லிலக்கணம் ==
வரிசை 75:
[[கல்லடிப் பாலம் (மட்டக்களப்பு)|கல்லடிப் பாலத்திலிருந்து]] (லேடி மன்னிங் பாலம்) சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசையென நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' எனப் பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.
[[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]] குருவான அருட்தந்தை லாங் (Fr. Lang) என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து [[இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்]] ஊடாக [[1960கள்|1960களில்]] ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.<ref>
மீனிசை பற்றிப் பல கருத்துக்கள் இருந்தபோதிலும் மட்டக்களப்பானது ''மீன் பாடும் தேன் நாடு'' என்றே நோக்கப்படுகிறது. பல மட்டக்களப்புசார் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் இலச்சினைகள் மீன் அல்லது [[கடற்கன்னி]] உருவம் கொண்டதாகக் காணப்படுவது மட்டக்களப்பிற்கும் '[[மீன்]] பாட்டிற்கும்' உள்ள தொடர்பைக் காட்டுகிறது.
வரிசை 85:
{{Main|கிழக்கிலங்கைத் தமிழர்களின் வரலாறு}}
=== ஆரம்ப வரலாறு ===
இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு புராண மற்றும் தொல்லியல் சான்றுகள் உள்ளன. இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணமும்கூட, இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது. [[தொலெமி]]யின் (கி.பி 90 – 168) வரைபடம் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்குக் கரையோரப் பகுதியை நாகதீபம் எனக்குறிப்பிடுவதாகக் கருத்து நிலவுகின்றது. எனவே இங்கு நாகர் வாழ்ந்தனரெனக் கருத இடமுள்ளது<ref>
=== மேலைத்தேயர் ஆட்சி ===
வரிசை 107:
மட்டக்களப்பானது இயற்கை எழில் நிறைந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது. [[பாசிக்குடா]] மற்றும் [[கல்குடா]] கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை. பாசிக்குடா கடற்கரையின் ஒரு பகுதி, அலைகள் குறைவான, மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களைக் கவரும் அழகிய அமைப்புடையதாகும்.
மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. [[மார்ச்]] முதல் [[மே]] வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை “செல்சியஸ்“ அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,[[நவம்பர்]] முதல் [[பெப்ரவரி]] வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை “செல்சியஸ்“ வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய [[மழைவீழ்ச்சி]]யும் காணப்படுகிறது.<ref>
{{Weather box
வரிசை 306:
;வான் வழி:
[[இரத்மலானை விமான நிலையம்|இரத்மலானை விமான நிலையத்திலிருந்து]] மட்டக்களப்பு வாவி இறங்குமிடத்திற்கும், [[மட்டக்களப்பு விமான நிலையம்|மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு]] பயணிகள் விமான சேவை உள்ளது. ''கெலிருவர்ஸ்'' மற்றும் ''சினமன் எயார்'' விமான போக்குவரத்து தற்போது இடம்பெறுகின்றது.<ref>
=== வைத்தியசாலை ===
வரிசை 313:
== கல்வி நிறுவனங்கள் ==
[[படிமம்:Silver jubilee building of EUSL.jpg|200px|left|thumb|இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் - வெள்ளி விழா மண்டபம்]]
பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மைப் பல்கலைக்கழகமான [[கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை]] இம் மாவட்டத்தின் [[வந்தாறுமூலை]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 17 [[கி.மீ]] தொலைவில் மட்டக்களப்பு-திருகோணமலை [[ஏ-15 நெடுஞ்சாலை (இலங்கை)|ஏ-15]] நெடுஞ்சாலையில் உள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயங்கள் மண்முனை வடக்கு, மண்முனைப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப் பற்றென நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் 233 பாடசாலைகளில்<ref>
மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி, தாழங்குடா கல்வியியற் கல்லூரி, [[சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி]] (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்), ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, [[இலங்கை திறந்த பல்கலைக்கழகம்|இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின்]] மட்டக்களப்பு பிராந்திய நிலையம் போன்றவும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும். இவற்றைத் தவிர தனியார் நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளில் தகவல் தொழில் நுட்பம், ஆங்கில மொழி மூலமாகக் கல்வியூட்டல், ஆங்கிலக் கல்வி போன்றன குறிப்பிடத்தக்கன. இந்திய பல்கழைக் கழகங்களில் தொலைக்கல்வி பாடநெறிகளும் இடம் பெறுகின்றன.
== கலாசாரம் ==
இங்கு பெரும்பாலும் [[தமிழர் பண்பாடு]] செல்வாக்கு செலுத்தும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இசை, நடனம், நாடகம், சமயமென இதன் தாக்கம் உள்ளது. [[தமிழர் ஆடற்கலை]]களில் ஒன்றான [[நாட்டுக்கூத்து]] (வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்து) இங்கு பிரபல்யம் பெற்றது. ஆயினும், குறிப்பாக முசுலிம்கள் அதிகமாகம் வாழும் பகுதிகளில் இசுலாமிய கலாச்சாரம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், இங்கு ஐரோப்பிய கலாச்சாரத்தின் தாக்கமும் காணப்படுக்கின்றது. இதில் போர்த்துக்கேய கலாச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. இங்கு "கத்தோலிக்க பறங்கியர் ஒன்றியம்" என்ற போர்த்துக்கேய கலாச்சாரத்தைப் பின்பற்றும் அமைப்பு காணப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் [[இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி]] பேசுவோர் ([[போர்த்துக்கல் பரங்கியர்]]) இங்குள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>
== சமயம் ==
வரிசை 324:
[[படிமம்:St. Mary's Cathedral, Batticaloa.JPG|thumbnail|புனித மரியாள் பேராலயம்]]
[[படிமம்:Jami-Us-Salam Jummah Masjid - mosque in Batticaloa town.JPG|thumbnail|மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்]]
[[இந்து]], [[இசுலாம்]], [[கிறித்தவம்]], [[பௌத்தம்]] ஆகிய நான்கு சமய நம்பிக்கை கொண்டவர்கள் இம்மாவட்டத்தில் காணப்படுகின்றனர். இவர்களில் இந்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். இச்சமயங்களைப் பிற்பற்றுவோர் இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர், பெளத்தர், ஏனையோர் முறையே 64.6%, 25.5%, 8.8%, 1.1%, 0.0% என்ற அடிப்படையில் 2012ம் ஆண்டில் இலங்கை குடித்தொகை, புள்ளிவிபர திணைக்கள கணக்கெடுப்பில் காணப்பட்டனர்.<ref>
மட்டக்களப்பு வரலாற்றுடன் சமயங்களின் முக்கியத்துவமும் அங்கு காணப்பட்டது. இதற்குச் சான்றாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன இந்து ஆலயங்கள் பலவற்றைக் காணலாம். இராமாயணத்துடன் தொடர்படுத்தப்படும் மாமாங்கம் முதல் பல புராதன இந்து ஆலயங்கள் இங்கு காணப்படுகின்றன. இங்கு கண்ணகி வழிபாடு வேறுபகுதிகளில் இல்லாதவாறு முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது. போர்த்துக்கேயர் வருகையுடன் இங்கு உருவாகிய கிறிஸ்தவம், பல வரலாற்று கிறிஸ்தவ ஆலயங்களைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பெரிய இசுலாமிய பள்ளிவாயில்கள் முசுலிம்கள் அதிகமாக வாழும் இடங்களில் காணப்படுகின்றன. நகரத்தில் இந்நான்கு சமயங்களின் முக்கிய வணக்க நிலையங்கள் காணப்படுகின்றன.
== விளையாட்டு ==
[[துடுப்பாட்டம்]], [[காற்பந்தாட்டம்]] என்பன பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகவுள்ளது. ஆனாலும் தேசிய அளவில் மட்டக்களப்பிற்கு புகழ் தேடித் தந்த விளையாட்டாகக் [[கூடைப்பந்தாட்டம்]] அமைந்துள்ளது.<ref>
== மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் ==
வரிசை 344:
* [[குளக்கோட்டன் தரிசனம்]] - க.தங்கேஸ்வரி
* [[கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு]] - க.தங்கேஸ்வரி
* [[மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச் சுவடுகள்]] (இரு பாகங்கள்) - க.தா.செல்வராசகோபால், எஸ்.பி.கனகசபாபதி <ref>
== இயற்கை அழிவுகள் ==
* [[1956]] ஆம் ஆண்டு ஏற்பட்ட [[வெள்ளம்]]
* [[1978]] நவம்பர் மாதம் ஏற்பட்ட [[கிழக்கு மாகாண சூறாவளி, 1978|கிழக்கு மாகாண சூறாவளி]]
* [[2004]] டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட [[சுனாமி]] – [[2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்|2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தினால்]] மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்று. இதில் 35,000 க்கு மேற்பட்டோர் இறந்தும், கிட்டத்தட்ட 450,000 பேர் இடம்பெயர்ந்தும் இன்னலுக்குட்பட்டனர்.<ref name="stat">
== நாகர் கிணறு ==
|