திருத்துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 1:
'''திருத்துறையூர்''' (''Thiruthuraiyur'') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்]], [[அன்னங்அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம்|அன்னங்அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு]] உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
 
== மக்கள் வகைப்பாடு ==
இவ்வூரானது மாவட்டத் தலைநகரான [[கடலூர்|கடலூரில்]] இருந்து 31 கி.மீ தொலைவிலும், அன்னங்அண்ணாகிராமத்தில் இருந்து 4 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யிலிருந்து 185 கி.மீ தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 956 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 4092 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2079, பெண்களின் எண்ணிக்கை 2013 என உள்ளது. மக்களின் எழுத்தறிவு விகிதம் 65.3 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்<ref>http://www.onefivenine.com/india/villages/Cuddalore/Annagramam/Thiruthuraiyur</ref>
 
== வரலாறு ==
துறையூர் சங்ககாலத்தில் சிறப்புடன் விளங்கிய ஊர்களில் ஒன்று. இது இக்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது. துறையூர் ஓடைகிழார் என்னும் புலவர் இவ்வூரில் வாழ்ந்துவந்தார்.இவ்வூரில் ஓடை எனப் பெயர் கொண்ட ஆறு ஒன்று ஓடியது.இதனால் இது “தண்புனல் வாயில் துறையூர்” எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புலவர் கடையெழு வள்ளல்களில் ஒருவனான வேள் ஆய் அண்டிரனை வாழ்த்தும்போது அவன் துறையூர் ஓடை ஆற்று மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல காலம் நலமுடன் வாழவேண்டும் என வாழ்த்துகிறார். <ref>புறநானூறு 136</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருத்துறையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது