பரதநாட்டியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: ஒடிசி - link(s) தொடுப்புகள் ஒடிசி (நடனம்) உக்கு மாற்றப்பட்டன
No edit summary
வரிசை 14:
[[படிமம்:பரதநாட்டியப் பெண்.JPG|thumb|பரதநாட்டியப் பெண்]]
[[படிமம்:Indian-dancer-nataraja.png|thumb|250x316px|right|பரத நாட்டியக் கலைஞர் ஒருவரின் நடனத் தோற்றம்]]
'''பரத நாட்டியம்''' [[தென்னிந்தியா]]வுக்குரிய, சிறப்பாகத் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்குரிய]] [[நடனம்|நடனமாகும்]]. இது மிகத் தொன்மை வாய்ந்ததும்{{cn}}, [[இந்தியா]]விலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர்{{cn}}. அதேவேளை பரதம் என்ற சொல், ப - [[பாவம்]], ர - [[இராகம்|ராகம்]], த - [[தாளம்]] என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம்ச் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது{{cn}}. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.<ref name="ஞானாம்பிகை குலேந்திரன்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/d051/d0514/html/d05144in.htm | title=பரதநாட்டியம் | accessdate=அக்டோபர் 30, 2012 | author=ஞானாம்பிகை குலேந்திரன்}}</ref> பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் [[தேவதாசி முறை|தேவதாசிப் பெண்கள்]] ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.
 
இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களின்]] முழுமுதற் கடவுளான [[சிவன்]] கூட, [[நடராஜர்]] வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் [[பார்வதி]] ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பரதநாட்டியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது