இந்த அரச குடும்பம் கோலாசொரூபம் என்றும் அழைக்கப்பட்டது. சிரக்கல் கோவிலகத்தின் மன்னர்கள் கோலாத்திகள் என்று அழைக்கப்பட்டனர். உதய வர்மன் கோலாத்திரியின் அரசவைக் கவிஞராக செருசேரி என்பவர் இருந்தார். செருசேரி கோலாஅத்திரியின் நண்பராக இருந்தார். கோலத்திரியின் தோற்றம் கேரளபதி மற்றும் கேரள மகாத்யம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலி நாட்டுக் குடும்பம் பல நூற்றாண்டுகளாக கோலாத்திரி என்று அறியப்பட்டனர். மேலும் அவை நேரடியாக [[சேரர்]], [[பாண்டியர்|பாண்டியர்கள்]], [[சோழர்|சோழர்கள்]] மற்றும் [[ஆய் நாடு|ஆய்]] (பின்னர் [[வேணாடு]] என்றும் பிற்காலத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பம்) என்றும் அழைக்கப்பட்டன. இவை [[திருவனந்தபுரம்]] பகுதியில் தோன்றியது புலி நாடு என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் கோலாத்திரி சேரர் மற்றும் ஆயின் ஒரு கிளையாகத் இருந்திருக்கலாம். கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில் குலசேகரப் பேரரசு அல்லது மகோதயபுரத்தின் பெருமாள் ஆட்சியாளர்கள் காணாமல் போன பின்னர், [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரளாவில்]] உள்ள எழிமலாவில் இவர்கள் தோன்றியுள்ளனர். மேலும், இவர்களது அரண்மனை [[கேரளம்|கேரளாவில்]] முற்றிலும் சுதந்திரமான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய அரசியல் இல்லங்களில் ஒன்றாகும். <ref name="Kol29">Perumals of Kerala by M. G. S. Narayanan (Calicut: Private Circulation, 1996)</ref> கோலாத்திரி குடும்பமும் திருவிதாங்கூர் குடும்பமும் 1990களில் ஒருவருக்கொருவர் பெண் குழந்தைகளை ஒருவருக்கொருவர் தத்தெடுத்தன.