'''லே''' அல்லது '''லெக்''' (''Leh'') என்பது [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] மாநிலத்தில் [[லடாக்|லடாக் பகுதியில்]] உள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். வட இந்தியாவின் லடாக் என்ற யூனியன் பிரதேசத்திற்கு தலைநகரமாகவும் இது உள்ளது. லே மாவட்டத்தில் அமைந்துள்ள லே இமயமலை இராச்சியம் லடாக்கின் வரலாற்று தலைநகராகவும் இருந்தது. லடாக் இராச்சியத்தின் இருக்கை லே அரண்மனையில் இருந்தது. திபெத்தில் உள்ள பொட்டாலா அரண்மனை கட்டப்பட்ட அதே நேரத்தில் அதே பாணியில் லடாக் அரச குடும்பத்தின் முன்னாள் மாளிகையும் கட்டப்பட்டது. லே கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3,524 மீட்டர் (11,562 அடி) உயரத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக தென்மேற்கில் சிறீநகரையும் தெற்கே லே – மணாலி தேசிய நெடுஞ்சாலை வழியாக மணாலியையும் இணைக்கிறது. 2010 ஆம் ஆண்டில் மேகம் வெடிப்பு மூலம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் லே நகரம் பெரிதும் சேதமடைந்தது.