கிமு 343 - 332-இல் பண்டைய எகிப்து இராச்சியத்தை கைப்பற்றிய அகாமனிசியப் பேரரசர்கள் [[மூன்றாம் அர்தசெராக்சஸ்]] (கிமு 343–338 ), '''[[நான்காம் அர்தசெராக்சஸ்''']] (கிமு 338–336) மற்றும் [[இரண்டாம் டேரியஸ்]] (கிமு 336–332) எகிப்திய [[பார்வோன்|பார்வோன்களாக]] ஆட்சி செய்தனர். இவர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர் எனபர். கிமு 332-இல் எகிப்தின் பாரசீகர்களின் ஆட்சியை, பேரரசர் [[அலெக்சாண்டர்]] கைப்பற்றினார். அலெக்சாண்டரின் இறப்பிற்குப் பின்னர், அவரது படைத்தலைவர் [[தாலமி சோத்தர்]] மற்றும் அவரது [[தாலமி வம்சம்|தாலமி வம்சத்தினர்]] எகிப்தில் [[தாலமைக் பேரரசு|தாலமி பேரரசை]] நிறுவி கிமு 305 முதல் கிமு 30 முடிய ஆண்டனர்.