[[பௌத்தம்]] [[இலங்கை]]யில் அறிமுகப்படுத்தப்பட முன், இவர்கள் இந்துசமயத்தையும் பல்வேறு உள்ளூர்அந்த நம்பிக்கைகளையும்பகுதியின் கைக்கொண்டவர்களாககடவுள் இருந்திருக்கக்நம்பிக்கைகளை கூடும்கொண்டவர்களாக எனக்கருதப்படுகிறதுஇருந்திருக்கக்கூடும்.{{cn}} எனக்கருதப்படுகிறது. சிங்களவரின் [[சமயம்|சமய]] அமைப்புகளையும் நம்பிக்கைகளையும் '''சிங்களர் சமயம்''' குறிக்கின்றது எனலாம். அனைத்து சிங்களவர்களுக்கும் ஒரே சமயத்தைப் பின்பற்றுவது இல்லை என்றாலும், அனேக சிங்களர்கள் [[தேரவாத பௌத்தம்|தேரவாத பெளத்த]] அதாவது புத்த மதத்தை தழுவி கொண்ட பௌத்தத்தை இவ்வாறு தேரவாத பௌத்தம் என்றும் சமயத்தை முதன்மையாகப் பின்பற்றுகின்றார்கள். பௌத்தம் சிங்களரின் பொதுப் பண்பாட்டை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது. கந்தன் ([[முருகன்]]), பத்தினி ([[கண்ணகி]]) போன்ற "தெய்வங்களின்" வழிபாடும் சிங்களவர் சமய நம்பிக்கைகளுடன் கலந்துள்ளது. பௌத்தம் நன்றாக இலங்கையில் வேரூன்றிய பின், ஐரோப்பியர் ஆதிக்கம் ஏற்படும்வரை, சிங்களவர் பெரும்பாலும் பௌத்தர்களாகவே இருந்தார்கள் என்று கூறலாம். கி.பி 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் ஆட்சியின் போது, அவர்கள் ஆட்சியின் கீழிருந்த கரையோர மக்கள் பலர் கத்தோலிக்க கிறுத்துவர் சமயத்தைத் தழுவினார்கள். அதன்பின், ஒல்லாந்த, பிரித்தானிய ஆட்சிகளின்போது பலர் அவர்களுடைய மதப்பிரிவான புரொட்டஸ்தாந்து சமயத்துக்கு மாறினார்கள். சிறுபான்மையான சிங்களர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றார்கள். இஸ்லாமிய சிங்களர்களும் உள்ளார்கள்.