ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
==உயிர்மெய் வருக்கம்==
 
14.{{green|கண்டொன்று சொல்லேல்.}}<br />
:*கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.
 
15.{{green|ஙப் போல் வளை.}}<br />
:*''''ங'''' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ <br> அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.
*"ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
16.{{green|சனி நீராடு.}}<br />
:
* சனி(குளிர்ந்த) நீராடு.
17.{{green|ஞயம்பட உரை.}}<br />
:* கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.
 
18.{{green|இடம்பட வீடு எடேல்.}}<br />
:* உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.
 
19.{{green|இணக்கம் அறிந்து இணங்கு.}}<br />
:* ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.
 
20.{{green|தந்தை தாய்ப் பேண்.}}<br />
:* உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.
 
21.{{green|நன்றி மறவேல்.}}<br />
:* ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
 
22.{{green|பருவத்தே பயிர் செய்.}}<br />
:* எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.
 
23.{{green|மண் பறித்து உண்ணேல்.}}<br />
:* பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)
:* நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)
 
24.{{green|இயல்பு அலாதன செய்யேல்.}}<br />
:* நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
 
25.{{green|அரவம் ஆட்டேல்.}}<br />
:* பாம்புகளை பிடித்து விளையாடாதே.
 
26.{{green|இலவம் பஞ்சில் துயில்.}}<br />
:* 'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு
 
27.{{green|வஞ்சகம் பேசேல்.}}<br />
:* கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே
 
28.{{green|அழகு அலாதன செய்யேல்.}}<br />
:* இழிவான செயல்களை செய்யாதே
 
29.{{green|இளமையில் கல்.}}<br />
:* இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை ('''இலக்கணத்தையும், கணிதத்தையு'''ம்) தவறாமல் கற்றுக்கொள்.
 
30.{{green|அறனை மறவேல்.}}<br />
 
:* கடவுளை மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்
 
31.{{green|அனந்தல் ஆடேல்.}}<br />
:* மிகுதியாக தூங்காதே
 
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது