ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 128:
==ககர வருக்கம்==
 
32. {{green|கடிவது மற}}<br />
:* யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.
 
33. {{green|காப்பது விரதம்}}<br />
:* தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் ('''அல்லது''')
:* பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.
 
34. {{green|கிழமை பட வாழ்}}<br />
:* உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்
 
35. {{green|கீழ்மை யகற்று}}<br />
:* இழிவான குணஞ் செயல்களை நீக்கு
 
36. {{green|குணமது கைவிடேல்}}<br />
:* நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).
 
37. {{green|கூடிப் பிரியேல்}}<br />
:* நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே
 
38. {{green|கெடுப்ப தொழி}}<br />
:* பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.
 
39. {{green|கேள்வி முயல்}}<br />
:* கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்
 
40. {{green|கைவினை கரவேல்}}<br />
:* உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.
 
41. {{green|கொள்ளை விரும்பேல்}}<br />
:* பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.
 
42.{{green| கோதாட் டொழி}}<br />
:* குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)
 
43.{{green| கௌவை அகற்று}}<br />
:* வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
 
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது