சட்டப்பேரவை முன்னாள் தலைவர் [[கா. காளிமுத்து|காளிமுத்து]], [[கவிஞர் நா. காமராசன்|கவிஞர் நா.காமராசன்]], முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் ரகுமான்கான்.அதன் ஒரு பகுதியாக நடந்த சட்டநகல் எரிப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். இதன்மூலம் [[மு. கருணாநிதி|கருணாநிதியின்]] மனதில் இடம்பிடித்தார். <ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/571010-rahman-khan-passed-away-1.html எம்ஜிஆருக்கு சிம்மசொப்பனமாக இருந்த ரகுமான்கான்: திமுகவின் இடி முழக்கம் ஓய்ந்தது]</ref>