கல்கா ஆற்று யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 11:
முகமத்தை துரத்திய மங்கோலிய தளபதிகளில் ஒருவரான செபே முகமத்தின் இறப்பைப் பற்றி கேள்விப்பட்ட பொழுது செங்கிஸ்கானிடம் ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கால அவகாசம் கொடுக்குமாறு கோரினார். அவ்வருடங்களில் தனது படையெடுப்புகளை தொடர்ந்து விட்டு பிறகு காக்கேசிய வழியாக மங்கோலியாவிற்கு திரும்ப முடிவு செய்திருந்தார்.<ref name="de Hartog107">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 107.</ref>
செங்கிஸின் பதிலுக்கு காத்திருந்த நேரத்தில் செபே மற்றும், முகமத்தை துரத்திய மற்றொரு தளபதியான சுபுதை ஆகியோர் தங்களது 20,000 வீரர்களைக் கொண்ட ராணுவத்தை வழிநடத்தினர். இந்த ராணுவத்தில் ஒவ்வொருவரும் ஒரு தியுமன் வீரர்களுக்கு தலைமை தாங்கினார்.<ref name="de Hartog107" /> அவர்கள் தங்களுக்கு பின்னர் அழிவின் பாதையை விட்டு சென்றனர். பாரசீக ஈராக் (ஈராக்-இ அஜம்) மற்றும் அசர்பைஜான் ஆகிய பகுதிகள் வழியே சென்றனர். ரே, சஞ்சன் மற்றும் கஸ்வின் ஆகிய நகரங்களை சூறையாடினர். ஹமாதான் நகரம் எதிர்ப்பின்றி சரணடைந்தது. அதே நேரத்தில் அசர்பைஜானின் அட்டாபெக்கான ஒஸ்பெக் தனது தலைநகரமான தப்ரிசை மங்கோலியர்களுக்கு ஒரு பெரிய தொகை, உடை மற்றும் மங்கோலியர்களின் சிறந்த ஆயுதங்களான குதிரைகள் ஆகியவற்றை அளித்ததன் மூலம் அழிவிலிருந்து காப்பாற்றினார்.<ref name="de Hartog116">de Hartog, ''Genghis Khan: Conqueror of the World'', p. 116.</ref>
==உசாத்துணை==
|