வள்ளியம்மை சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஈழத்து எழுத்தாளர்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:39, 15 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்

வள்ளியம்மை சுப்பிரமணியம் ஈழத்து எழுத்தாளரும், சமூக உணர்வாளரும், நெசவு ஆசிரியரும் ஆவார்.இவர் இலங்கையின் பொது உடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கே. ஏ. சுப்பிரமணியத்தின் மனைவி ஆவார்.

வள்ளியம்மை சுப்பிரமணியம்

வாழ்க்கைக் குறிப்பு

வள்ளியம்மை சுப்பிரமணியம் சுழிபுரம் பத்திரகாளிகோவிலடியைப் பிறப்பிடமாக‍க் கொண்டவர். சுழிபுரம் மெய்கண்டான் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்.கற்கும் காலத்திலேயே எழுத்தார்வம் மிக்கவராய் திகழ்ந்த இவர் பண்டிதர் படிப்பினை மேற்கொண்டு பால பண்டிதர் தேர்வில் சித்திபெற்றார். நெசவுக் கற்கை நெறியில் பயின்று நெசவு ஆசிரியராக பல்வேறு கிராமங்களில் பணிபுரிந்தார். 1962 இல் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த பொதுவுடமை வாதியான கே. ஏ. சுப்பிரமணியம் என்பவரை காதலித்து கலப்புத் திருமணம் புரிந்த இவரது திருமணம் சீர்திருத்த திருமணமாக அமைந்த‍து. அருவாளும் சம்மட்டியுமே தாலியாக அமைந்த‍து. சத்தியராசன், சத்தியகீர்த்தி, சத்தியமலர் என மூன்று பிள்ளைகளைப் பெற்றார். ஒரு சமூகப் போராளியாக சாதியத்திற்கெதிரான போராட்டத்தில் தலைமை தாங்கிய துணைவருக்கு உற்ற துணையாக இருந்து பல இன்னல்களையும் சுமைகளையும் சுமந்து வாழ்ந்து வந்தவர். இனப்போர் நிகழ்ந்த காலத்தில் மூத்த மகனும் இனவிடுதலைப் பாதையில் சென்று பின் தமிழகத்தில் விபத்தில் இறந்துபோக இவர் சிங்கப்பூரில் வசித்த இளைய மகன் சத்தியகீர்த்தியுடன் வசித்தபோது சிங்கப்பூரில் தனது எழுத்து பணியை மீண்டும் ஆரம்பித்தார்.தற்போது எண்பது வயதில் மீள தனது மகளுடன் இலங்கை வந்து சுழிபுரம் சத்தியமனையில் வசித்து வருகின்றார்.

எழுத்துலகில்

பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே எழுத்தாற்றலை விருத்திசெய்த இவர் பண்டிதர் தேர்வுக்காய் கற்றகாலத்தில் எழுதிய சிறுகதைகள் வீரகேசரி,கலைமதி, கலைச்செல்வி,ஜனசக்தி ஆகிய இதழ்களில் வெளிவந்தன. சிங்கப்பூரில் கவிமாலைக் குடும்பம் அமைப்புடன் இணைந்து பல கவிதைகளை யாத்து வாசித்துப் பாராட்டுக்களும் விருதுகளும் பெற்றுள்ளார். விவாத அரங்குகளில் உரையாற்றியுள்ளார்.இவரது பள்ளிக்கூட அனுபவங்களைத் தொகுத்து "பசுமையான நினைவுகளின் பண்ணாகம் மெய்கண்டான்" எனும் நூலை 2019 இல் எழுதியுள்ளார். இவரது கவிதைகளையும் சிறுகதைகளையும் தொகுத்து நவம்பர் 2019 இல் தேசியகலை இலக்கியப் பேரவை "வெற்றிக்கு வலிகள் தேவை" என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளது. ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூலிலும் இவரது கவிதை பிரசுரமானது.தொடர்ந்தும் தனது துணைவருடனான வாழ்க்கைப் பயணத்தை வாழ்வின் சந்திப்புகள் என்ற தலைப்பில் தொடராக முகநூலில் எழுதிக்கொண்டிருக்கின்றார்.

சமூகப் பணிகள்

நெசவு ஆசிரியையாக பணியாற்றியபோது செல்லும் கிராமங்களிலெல்லாம் தனது மாணவிகளை வழிப்படுத்துவதில் ஆற்றல் மிக்கவராக திகழ்ந்து தனது துணைவரின் போராட்டங்கள் ஒவ்வொன்றிலும் உறுதுணையாக இருந்தும் அதன் வலிகளைத் தாங்கியும் தனது மூன்று குழந்தைகளையும் கற்பித்தும் வாழ்ந்த காலத்தில் தனது கணவர்களின் தோழர்களை உபசரிப்பதிலும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் புரிவதிலும் தனது சமூக‍க் கடமையைச் செவ்வனே செய்தவர். துணைவரின் தலைமறைவு வாழ்வில் பல இன்னல்களையும் தாங்கியவர். இளமையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக இருந்துள்ளார். தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்பாடுகளிலும் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் தனது துணைவருக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டுமுள்ளார்.

வெளியான நூல்கள்

  • பசுமையான நினைவுகளில் பண்ணாகம் மெய்கண்டான்
  • வெற்றிக்கு வலிகள் தேவை

மேற்கோள்கள்

சத்தியமனை முகநூல் வள்ளியம்மை சுப்பிரமணியம்