சத்திய சாயி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 55:
 
== சமூக சேவைகள் ==
அருள்மிகு சத்திய சாயிபாபா மற்றும் அவரது பக்தர்கள் நூற்றுக்கணக்கான சமூகச்சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்{{citation needed}}. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமூகச் சேவை நிறுவனங்கள் எனப் பல வழிகளில் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் இவை இயங்குகின்றன. விழுமிய சமூகம் (Sociocare), விழுமிய கல்வி அதாவது [[விழுமியகல்வி|விழுக்கல்வி]] (Educare), விழுமிய மருத்துவம் (Medicare), விழுமியக் குடிநீர் (aquacare) எனப் பல துறைகளில் அவரின் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அவரது நிறுவனம், உலகம் முழுவதும் 136 நாடுகளில் மக்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது.
 
விழுமியச் சமூக (Sociocare) நிறுவனம் உலகின் பல இடங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் [[ஒரிசா]]வில் நடந்த வெள்ளத்தில் வீடுகள் இழந்தவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.saibaba.ws/service/orissa_flood_relief.htm saibaba.ws/service/orissa_flood_relief]</ref>.
வரிசை 63:
விழுமிய மருத்துவத்தினைத் தொண்டுப்பணியாக [[அருள்மிகு சத்தியசாயி நிறுவனம்]] உலகின் பல நாடுகளில், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களும் பயன் பெறும் வகையில் பல இலவச மருத்துவ முகாம்களையும், பல இலவச மருத்துவமனைகளையும் நடத்திவருகின்றது.<ref>http://www.sathyasai.org/saihealth/content.htm</ref><ref>http://www.saihospital.org/ssshhospitals.htm</ref><ref>http://www.srisathyasai.org.in/Pages/Service_Projects/psn_gen.htm</ref><ref>[http://www.saibaba.ws/service/twintowersofhealing.htm]</ref>.[[புட்டபர்த்தி]]யிலும் [[பெங்களூரு]]விலும் [[அருள்மிகு சத்திய சாயிபாபா உயர்சிறப்பு மருத்துவமனை|உயர்சிறப்பு மருத்துவமனைகள்]] நிறுவப்பட்டுள்ளன.
 
தூய குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆந்திரவில் உள்ள அனந்தபூர் மற்றும் வடக்கு,கிழக்கு கோதாவரி மாவட்டங்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீரைச் ”அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை” வழங்கி உள்ளது. அனந்தபூர் மாவட்ட குடிநீர்ப் பிரச்னை சுதந்திர காலத்த்திற்குகாலத்திற்கு முற்பட்டது, எந்த அரசாலும் தீர்த்துவைக்க முடியாமல் இருந்தது. இதனை அருள்மிகு சத்திய சாயிபாபா அவர்கள், குறுகியகாலச் சாதனையாக அதாவது ஒரே வருடத்தில் எழுநூறு கிராமத்திற்கு நல்ல குடிநீர் கிடைக்கும்படியாக விரைவில் செய்து முடித்தார். உண்மையாகச் சொல்லப்போனால் இதுதான் அவரின் அதிசயம்மிக்க அற்புதம் எனலாம்.<ref>media.radiosai.org/Journals/Vol.../cover_story_godavari.htm</ref>,<ref>http://www.youtube.com/watch?v=p41hJWvBRu4</ref>,<ref>http://www.srisathyasai.org.in/Pages/...Projects/Anantapur.htm</ref>
 
சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளால் முயற்சி செய்யப்பட்ட, தோல்வியடைந்த தெலுங்கு கங்கைத் திட்டத்தினைச் சீர்செய்து சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வழங்கியது, அருள்மிகு சத்திய சாயி மைய அறக்கட்டளை.<ref>http://www.srisathyasai.org.in/Pages/Service_Projects/Chennai.htm -</ref><ref>http://www.indianexpress.com/news/heart-for-an-atheist-gold-ring-for-believer/21444/</ref>
"https://ta.wikipedia.org/wiki/சத்திய_சாயி_பாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது