சிந்துநதிப் பூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
||
வரிசை 23:
வாலிபனான சக்திவேல் தனது சொந்த கிராமத்திற்கு திரும்ப வருவதிலிருந்து இந்த திரைப்படம் ஆரம்பிக்கிறது. திரும்பி வரும் அவனை கிராம மக்கள் கடவுளாக மதிக்கின்றனர். அவனை திருக்கவால் என்று அழைக்கின்றனர். திருக்கவால் இன்னும் தனது தந்தை செட்டியார், மாற்றாந்தாய் அலமு, அவர்களது மகன் மற்றும் மகளை வெறுக்கிறான். இரக்க குணம் படைத்த திருக்கவால் சீக்கிரமே முணுமுணுத்தான், கொடுமுடி மற்றும் திருக்கவாலின் தந்தை செட்டியார் ஆகியவர்களை எதிரிகளாக்கிக் கொள்கிறான். செட்டியார் வீட்டில் வேலை செய்யும் பசுபதி மற்றும் சின்னப்புள்ள இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். இது ஊருக்கு தெரிய வருகிறது. இதன் காரணமாக, திருக்கவால் அவர்களுக்கு திருமணத்தை ஏற்பாடு செய்கிறான். திருமணம் நடந்த சில நாட்களிலேயே விபத்து காரணமாக பசுபதி இறக்கிறான். கிராம மக்கள் அப்பாவியான திருக்கவால் மீது பழி போடுகின்றனர்.
ஒரு நேரத்தில் திருக்கவால் தனது தந்தை செட்டியார், தனது தாய் செண்பகவள்ளி மற்றும் அவனது குழந்தை தங்கை சிட்டுவுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறான். செட்டியார் செண்பகவள்ளியின் தங்கை அலமுவுடன் தகாத உறவு வைத்திருக்கிறார். இதன் காரணமாக அலமு கர்ப்பம் அடைகிறாள். இதை அறிந்த செண்பகவள்ளி குழந்தையான தனது மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறாள். கோபமடைந்த திருக்கவால் தனது தந்தையின் காலை காயமடைய செய்து விட்டு தப்பித்து ஓடுகிறான். குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வாழ்கிறான்.
== நடிகர்கள் ==
|