காளிங்கராயன் கால்வாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
B
வரிசை 1:
[[படிமம்:Kalingarayan canal.JPG|250px|thumb|ஈரோடு- காவிரி அருகில் ஓடும் காளிங்கராயன் வாய்க்கால்]]
 
'''காளிங்கராயன் வாய்க்கால்''' கொங்கு மண்டலத் தலைவர் [[காளிங்கராயன்]] என்பவரால் 1271 ஆம் தொடங்கப்பட்டு 1283 ஆம் முடிக்கப்பட்டது. இவ்வாய்க்காலின் மொத்த நீளம் 56 மைல்கள் (90 கிமீ) ஆகும். [[பவானி ஆறு|பவானி]], [[காவிரி]] ஆற்றுடன் கூடுவதற்கு சற்று முன் அணை கட்டி பவானி ஆற்று நீர் காளிங்கராயன் வாய்க்காலுக்கு திருப்பி விடப்பட்டது. 56 மைல்கள் பயணித்து [[நொய்யல் ஆறு|நொய்யல்]] ஆற்றில் ஆவுடையாபாறை என்னும் இடத்தில் இவ்வாய்க்கால் சேர்கிறது. இவ்வாய்க்கால் மூலம் [[ஈரோடு மாவட்டம்]] சிறப்பாக பயனடைகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 534 அடியாகும், முடியுமிடத்தில் இதன் சராசரி கடல் மட்ட உயரம் 412 அடியாகும். இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்கால் தொடங்குமிடத்திலிருந்து முடியுமிடம் வரையில் 36 மைல்கள்தானெனினும், இயற்கையாய் அமைந்த சிறுசரிவின் முழுப்பயனைப் பெறவேண்டியும் மிகுதியான நிலப்பகுதிகள் பாசனம் பெறவேண்டியும், இதனை வளைவுகளுடன் 56 மைல்கள் ஓடுமாறு செய்தார் காளிங்கராயர்.
 
700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாய்க்கால் மாசுக்களால் பாதிப்படைந்துள்ளது. 2007-ல் 12 கோடி ரூபாய் செலவில் இதை மேம்படுத்தப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு தேசிய வேளாண்மை மற்றும் கிராம்புற அபிவிருத்தி வங்கி நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/காளிங்கராயன்_கால்வாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது