ஒக்டோபர் எழுச்சி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாற்றை மாற்றிய ஊர்வலம்: எழுச்சியைத் தொடர்ந்த வெகுஜன போராட்டங்கள்
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
சிறிது நேரத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த சுண்ணாகம் பொலிஸ் நிலையம் முன்பாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொலீஸ் படையினர் பேரணியை வழிமறித்துத் தாக்கினர்.
தலைமை தாங்கி முன்னணியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித் தனமான குண்டாந்தடித் தாக்குதல் நடாத்தப்பட்டது.
மேற்படி தாக்குதலில் தலைமை தாங்கி முன்னணியில் சென்ற வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் இரத்தம் வழிந்தோட பொலீஸ் நிலையத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுதலையானார்கள்.
அன்றைய பேரணியில் முன்னே சென்று கொண்டிருந்த டாக்டர் சு.வே.சீனிவாசகம், [[கே. டானியல்]], எஸ்.ரி.என்.நாகரட்ணம், டி.டி.பேரேரா, எம்.முத்தையா மற்றும் அன்றைய வாலிபர் இயக்கத் தலைவர்கள் கடுமையான அடிகாயங்களுக்கு உள்ளாகினர். <ref>{{cite book|title=வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்|url=http://noolaham.net/project/148/14737/14737.html }} [[சி. கா. செந்திவேல்]] 2003</ref><ref>{{cite book|title=சாதி தேசம் பண்பாடு|url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 }} [[ந. இரவீந்திரன்]] 2014</ref>
அதைத் தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் நடுவீதியில் ''''சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்'''' முழக்கங்களுடன் அமர்ந்து விட்டனர். பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர் பொலிசார் இறங்கிவந்து கோசங்கள் எழுப்பாது இரண்டு இரண்டு பேராக நடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிரகாரம் தமது பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை உணர்த்தும் முகமாக வாய்களைக் கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு [[யாழ்ப்பாணம்]] வரை நடந்து சென்ற செய்தி அறிந்து, வீதியோரங்களில் கூடி நின்ற ஆயிரக்கணக்கான மக்கள்பொதுமக்கள் தமது கைகளை அசைத்து தமது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொண்டனர்.
மாலையில் யாழ் முற்றவெளயில்[[முற்றவெளி]]யில் மாபெரும் பொதுக்கூட்டம் டாக்டர் சு.வே.சீனிவாசகம் தலைமையில் நடைபெற்றது. [[நா. சண்முகதாசன்]], டி.டி.பேரேரா, [[சி. கா. செந்திவேல்]] உட்பட பலர் அங்கு உரையாற்றினர். கைது செய்யப்பட்ட வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் நள்ளிரவில் ஜாமீனில் விடுதலையானார்கள். ஆனால் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தது. <ref name=" ஈழநாடு 1966.10.22 ">{{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1966.10.22 |title=ஈழநாடு 1966.10.22 }} </ref>
 
== எழுச்சியைத் தொடர்ந்த வெகுஜன போராட்டங்கள் ==
[[சாவகச்சேரி]], [[சங்கானை]], [[அச்சுவேலி]], [[நெல்லியடி]] போன்ற இடங்களில் 1966 அக்டோபர் எழுச்சியைத் தொடர்ந்து தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரிப்போராட்டங்களில் ஈடுபட்ட வெகுஜன அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொய்க்குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பலர் வெளியே வரமுடியாதவாறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் இக்கட்டான நிலைமையை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியோடும், ஏனைய முற்போக்கு இயக்கங்களோடும் சம்பந்தப்பட்ட பல முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். அவர்களில் முக்கியமானவர் [[கம்பஹா]] தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்களாகும். இவரை, வடபகுதிப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்வார்கள் என்ற அச்சத்தால் பூட்டப்பட்டிருந்த ஆலயங்கள், கோவிற்கேணிகள், கிணறுகளில் அந்த மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் விதத்தில் அவற்றைச் சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப் பட்டிருந்ததையும், ஒடுக்கப்பட்டோர் குடிசைகளுக்குத் தீ மூட்டிய உயர்சாதியினரால் பாதிக்கப் பட்டவர்களின் கையறு நிலைமைகளையும் [[கே. ஏ. சுப்பிரமணியம்]] நேரடியாகக் காண்பித்தார். [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்கள் தான் கேட்ட, பார்த்த பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி பாரளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். <ref name=" நிறைவுகளும் நினைவுகளும் ">{{cite web |url=http://archive.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm |title=கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் ,நினைவுகளும் }} சூத்திரம் கே.சுப்பையா 2012</ref> <ref name="தொழிலாளி 1966.11.25">{{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_1966.11.25 |title=தொழிலாளி 1966.11.25 }} </ref>
"https://ta.wikipedia.org/wiki/ஒக்டோபர்_எழுச்சி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது