'''நாங்கூர்''' அல்லது '''திருநாங்கூர்''' தமிழ்நாட்டின் [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை]] மாவட்டம் , [[சீர்காழி]] வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம்<ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=%27Sirkazhi%27&dcodenew=14&drdblknew=10</ref>. இங்கு 'திருமணிமாடம்' அல்லது 'மணிமாடக் கோவில்' எனப்படும் 'சாச்வததீபநாராயணர் திருக்கோவில்' அமையப்பெற்றுள்ளது. இக்கோவில் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] ஆறு கோயில்கள் திருநாங்கூரிலும் ஐந்து கோயில்கள் திருநாங்கூருக்கு மிக அருகிலும் அமைந்துள்ளன. இப் பதினொரு திவ்யதேசங்களும் [[திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள்]] என அழைக்கப்படுகின்றன.