இந்திய தேசிய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 50:
=== இந்திரா காந்தி கால பகுதி ===
[[ஜவஹர்லால் நேரு|நேருவின்]] மறைவுக்குப் பின் இவர் [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுத்திரியின்]] அரசில் இந்திய மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு '''தகவல் மற்றும் செய்திதுறை''' அமைச்சராக பணியாற்றினார். [[லால் பகதூர் சாஸ்திரி|லால் பகதூர் சாசுத்திரியின்]] திடீர் மறைவை ஒட்டி பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் [[காமராசர்|கு. காமராசின்]] முயற்சியும் காரணமாகும். பின் 1967ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாக கூறி இந்திரா காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரி கொள்கையுடன் இருந்து அவர்கள் பொருளாதார திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்கு காரணம் என கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக பிரிந்தது. மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் [[இந்திய தேர்தல் ஆணையம்]] இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசிய காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர் குழு [[நிறுவன காங்கிரசு]] என்ற பெயரை சூட்டிக்கொண்டது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் [[பசுமைப் புரட்சி|பசுமை புரட்சி]] நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றிபெற்று வங்காள தேசம் உருவாக காரணமாக இருந்தார். 1974ல் [[சிரிக்கும் புத்தர்]] என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார்.
=== இந்திரா காந்திக்கு பிந்தய கால பகுதி ===
|