கரவெட்டியைச் சேர்ந்த பிரபல [[பொதுவுடமைவாதிபொதுவுடமை]]யானவாதியான [[பொன். கந்தையா]]வினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.
1947 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[தேர்தல்|தேர்தலில்]] இவர் [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி|பொதுவுடமைக் கட்சியின்கட்சி]]யின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், [[ஜி. ஜி. பொன்னம்பலம்|ஜி. ஜி. பொன்னம்பலத்தின்]] தலைமையில் இயங்கிய [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்|தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் ஆதரவுடன், [[பருத்தித்துறை]]த் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான [[பொன். கந்தையாவைகந்தையா]]வை எதித்துப்எதிர்த்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் [[பொதுச் செயலாளர்]] ஆனார்.