இத்தேர்தலில் மும்முனைப் போட்டி காணப்பட்டது. [[திமுக]] தலைமையிலான [[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]யில் [[பாரதிய ஜனதா கட்சி]], [[சு. திருநாவுக்கரசர்|சு.திருநாவுகரசின்]] [[எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|எம்.ஜி.ஆர் அதிமுக]], [[ஆர். எம். வீரப்பன்|ஆர்.எம்.வீரப்பனின்]] எம்.ஜி.ஆர் கழகம், ராஜகண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம், [[ஏ. சி. சண்முகம்|ஏ.சி.சண்முகத்தின்]] [[புதிய நீதிக் கட்சி|புதிய நீதிக்கட்சி]], [[தொல். திருமாவளவன்|திருமாவளவனின்]] [[விடுதலைச் சிறுத்தைகள்]] ([[ஆதி திராவிடர்]]), [[க. கிருஷ்ணசாமி|க. கிருஷ்ணசாமியின்]] [[புதிய தமிழகம் கட்சி]], [[ப. சிதம்பரம்|ப.சிதம்பரத்தின்]] [[காங்கிரசு சனநாயகப் பேரவை]]. ஆகியவை இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]], [[தமிழ் மாநில காங்கிரஸ்|தமிழ் மாநில காங்கிரசு]], [[பாமக]], [[சிபிஐ|இந்திய கம்யூனிஸ்ட்]] (சிபிஐ), [[சிபிஎம்|மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்]] (சிபிஎம்), எல். சந்தானத்தின் [[பார்வார்டு ப்ளாக்|ஃபார்வார்ட் ப்ளாக்]] ஆகியவை இடம் பெற்றிருந்தன. [[வைகோ|வைகோவின்]] மதிமுக முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. ஆனால் தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தால், பிரிந்து சென்று தனித்து போட்டியிட்டது..