தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
" {{Infobox company |name = தமிழ்நாடு அரச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:16, 6 நவம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - விழுப்புரம் என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அமைந்துள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் TN 32 விழுப்புரம் ஆகும்.
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
நிறுவுகை | 1990 |
தலைமையகம் | , விழுப்புரம் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு, அண்டை மாநிலங்கள்l |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
துணை நிறுவனங்கள் | |
இணையத்தளம் | [1] |
வரலாறு
சுதந்திர இந்தியாவில் 1965 க்கு முன்னர் விழுப்புரம் மற்றும் கடலூரை தலைமையிடமாக கொண்டு தந்தை பெரியார் போக்குவரத்து கழகமும், வேலூர் மற்றும் திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகமும், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு எம்.ஜி.ஆர் போக்குவரத்து கழகமும் செயல்பட்டு வந்தது.
பின்பு, ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகமாக 1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம் என மாற்றப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது.
போக்குவரத்து மண்டலம்
இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் 5 மண்டலங்கள் செயல்பட்டு வருகிறது.
- விழுப்புரம் - TN 32
- கடலூர் - TN 32
- திருவண்ணாமலை - TN 25
- வேலூர் - TN 23
- திருவள்ளூர் - TN 21
- காஞ்சிபுரம் - TN 21
என்ற எண்களின் பேருந்து போக்குவரத்து சேவை மண்டலங்களின் மூலம் இயங்குகிறது.
மாவட்டங்கள்
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் அமைந்துள்ளது.
மண்டல தலைமையிடம் மற்றும் பணிமனைகள்
- திருவண்ணாமலை மண்டலத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை - 1, திருவண்ணாமலை - 2, திருவண்ணாமலை - 3, ஆரணி, செய்யார், போளூர், வந்தவாசி - 1, வந்தவாசி - 2, சேத்துப்பட்டு, செங்கம், கோயம்பேடு மற்றும் கலசப்பாக்கம் ஆகியப் பணிமனை களையும் மற்றும் ஆரணி - 2 வது பணிமனையும், பெரணமல்லூர், வெம்பாக்கம், சமுனாமரத்தூர் ஆகிய நகரங்களில் புதிய பணிமனைகளை அமைத்து பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது.
- வேலூர் மண்டலத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர், கொணவட்டம் - 1, கொணவட்டம் - 2, குடியாத்தம், பேரணாம்பட்டு, கோயம்பேடு பணிமனைகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளும் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, சோளிங்கர் பணிமனைகளும் அமைந்துள்ளது
- காஞ்சிபுரம் மண்டலத்தின் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், ஓரிக்கை - 1, ஓரிக்கை - 2, உத்திரமேரூர் மற்றும் கோயம்பேடு பணிமனைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு - 1, செங்கல்பட்டு - 2, தாம்பரம், மதுராந்தகம், கல்பாக்கம் ஆகிய பேருந்து பணிமனைகள் அமைந்துள்ளது.
- திருவள்ளூர் மண்டலத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் கோயம்பேடு ஆகிய பணிமனைகள் அமைந்துள்ளது.
- விழுப்புரம் மண்டலத்தின் மூலம் விழுப்புரம் மண்டலத்தின் மூலம் விழுப்புரம் - 1, விழுப்புரம் - 2, விழுப்புரம் - 3, திண்டிவனம், பாண்டிச்சேரி, செஞ்சி மற்றும் கோயம்பேடு ஆகிய பணிமனைகளும் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி - 1, கள்ளக்குறிச்சி - 2, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சங்கராபுரம் ஆகிய பணிமனைகள் அமைந்துள்ளது.
- கடலூர் மண்டலத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர் - 1, கடலூர் - 2, நெய்வேலி T.S, சிதம்பரம் - 1, சிதம்பரம் - 2, விருத்தாசலம் - 1, விருத்தாசலம் - 2, காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி, பண்ருட்டி, வடலூர் ஆகிய பணிமனைகள் அமைந்துள்ளது [1]
அதிக வருவாய் ஈட்டும் வழித்தடங்கள்
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் 5 வழித்தடங்கள் மிகப்பெரிய வருவாய் ஈட்டும் வழித்தடங்களாக உள்ளது [2]
- திருவண்ணாமலை - சென்னை
- வேலூர் - சென்னை
- புதுச்சேரி - சென்னை
- காஞ்சிபுரம் - சென்னை
- ஆரணி - சென்னை
கோரிக்கை
வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் ஆனால் வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை மிகவும் குறைவு அல்லது ஓரிரு பேருந்துகள் அதே போல் வேலூரில் மாநகர பேருந்துகளும் இயங்குவதில்லை இதனை கருத்தில் கொண்டு வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி வேலூரை தலைமையிடமாக கொன்டு புதிய கோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வேலூர் மாவட்டம் முழுவதும் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்