'''தி. கவீ. சுப்பராய செட்டியார்''' (இறப்பு: 1894) என்பவர் 19 ஆம் நூற்றாண்டு புலவர்களுள் ஒருவர். திரிசிரபுரம் மகாவித்வான் [[மீனாட்சிசுந்தரம் பிள்ளை]]யின் மாணவர்களில் இவர் முதன்மையானவர் . 19 ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த புலவர்களில் ஓலைச்சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்த புலவர்களில் இவர் முக்கியமானவர் . இவர் '''சோடசாவதானம் சுப்பராய செட்டியார்''' என்றும் அழைக்கப்பட்டார்.
== தோற்றம் ==
[[பண்ருட்டி]]யில் வாழ்ந்த பெரும் வணிகர் [[சேனைத்தலைவர்]] குலத்தில் கஞ்சமலைபாலக்கரை வீரராகவ செட்டியாருக்கு மகனாக பிறந்தார் .இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவர்.ஆழ்ந்த அறிவும் நல்ல நினைவாற்றலும் கொண்டவர் .பதினாறு அவதானம் செய்யும்படி மிகவும் குறிகிய காலத்தில் தம் ஆசிரியரால் பயிற்றுவிக்கப்பட்டு சோடசாவதானம் சுப்பராய செட்டியார் என்று சிறப்பு பெயர் பெற்றவர் .