[[File:Warangal fort.jpg|thumb|right|300px|[[ருத்திரமாதேவி]]யால் 1261இல் கட்டப்பட்ட சிவன் கோயில் தோரண வாயில், [[வாரங்கல்]]]]
'''காக்கத்தியர்கள்''' [[தெலுங்கு]]ஆந்திர அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான தெலுங்குஆந்திர நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் [[ஆந்திரப் பிரதேசம்]] என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள்.<ref>Gribble, J.D.B., History of the Deccan, 1896, Luzac and Co., London</ref> அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம் [[வாரங்கல்]] என அழைக்கப்படுகிறது. காகத்தியர்கள் ஆரம்பத்தில் [[சமணம்|சமண மதத்தைப்]] பின்பற்றியதாகவும் பின்பு காலப் போக்கில் [[இந்து சமயம்|இந்து மதத்தின்]] அங்கமான [[சைவம்|சைவ சமயத்திற்கு]] மாறியதாகவும் வரலாறு உள்ளது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலைத்திருந்த பல தெலுங்கு அரச வம்சங்களுள் இதுவும் ஒன்று.