'''கோயம்புத்தூர்''' (''Coimbatore'') [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[சென்னை]]க்கு அடுத்த '''இரண்டாவது பெரிய நகரமும்''' தென்னிந்தியாவின் [[சென்னை]], [[ஹைதராபாத்]], [[பெங்களூரு]]க்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரம் ஆகும். இதேஇதேப் பெயரைக் கொண்ட [[கோயம்புத்தூர் மாவட்டம்|மாவட்டத்தின்]] தலைமையிடமான இது, தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். இது சுருக்கமாக '''கோவை''' (''Kovai'') என்று அழைக்கப்படுகிறது. தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்]], [[பாரதியார் பல்கலைக்கழகம்]], [[அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்]] ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான [[கொங்கு நாடு]] பகுதியைச் சேர்ந்த இந்நகரம், இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால், ''தென்னிந்திய மான்செஸ்டர்'' என்றும் அழைக்கப்படுகிறது. இந்நகரத்திலும், புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியில் தான் நவம்பர் மாதம் 24- ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. இதனாலையே நவம்பர் 24 கோயம்புத்தூர் பிறந்தநாளாக அனைவரும் கொண்டாடுவது வழக்கம்.