நீரணி மாடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
== அலங்காரம் ==
நீரணி மாடம் என்பது ஒரு உல்லாசப் படகு என்பதால் அதில் அலங்கார வேலைப்பாடுகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. அவற்றில் பின்வரும் பொருட்களால் [[அலங்காரம்]] செய்யப்பட்டிருந்தது.<ref>அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும் வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் கட்டளை யானையு மத்தக வுவாவும் வையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப் பூத்தூர் நிலையோ டியாப்புற வமைத்துக் காமர் பலகை கதழவைத் தியற்றி வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ மென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி அரிச்சா லேகமு நாசியு முகடும் விருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம் நேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம் சேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த - [[பெருங்கதை]]</ref><ref>பனையும் வெதிரும் பாசிலைக் [[கமுகு-பாக்கு|கமுகும்]] இனையன பிறவும் புனைவனர் நாட்டிக் கிடையும் பீலியு மிடைவரித் தழுத்தி மிடைவெண் டுகிலி னிடைநிலங் கோலி அரிச்சா லேகமு மார வள்ளியும் கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக் கட்டளை நாசியொடு கபோதங் காட்டி எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி ஏரணி யமைந்த வெழுநில நல்வினை நீரணி மாடத்து நிலாநெடு முற்றத்து - [[பெருங்கதை]]</ref>
 
# [[பனை]] மட்டைகளையும் சிறு [[மூங்கில்|மூங்கில்களையும்]] கமுகு இலைகளையும் கொண்டு மாடம் அமைக்கப்பட்டிருந்தது.
# நெட்டி [[மயிலிறகு|மயிலின் பீலி]] போன்றவற்றைக் கொண்டு மட்டைகளும் மூங்கில்களும் இலைகளும் இணைக்கப்பட்டன.
# வெள்ளை மயிலின் தோகையும் மான்கண், [[முத்து]], [[பொன்]] போன்றவற்றால் ஆன சாரளங்களால் தூண்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
# அவை மேலும் ஒளிவீசித் திகழும் பொருட்டுப் பொன்னிற [[ஓவியம்|ஓவியங்களைத்]] தீட்டிவைத்தும் இருந்தனர். அந்த ஓவியங்கள் பலகைகளைச் அழகுற அமைத்து வண்ணம் தீட்டிய நுண்ணிய நூலானாலும் கூட வரையப்பட்டிருந்தன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீரணி_மாடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது